districts

img

முதல்வருக்கு மனு அனுப்பிய சாலைப் பணியாளர்கள்

பெரம்பலூர், செப்.29 - தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்  பணியாளர்கள் சங்கத்தினர் குடும்பத்தினருடன் கையெழுத்திட்டு, கோரிக்கை மனுவை தமிழக  முதல்வருக்கும், நெடுஞ்சாலைத்துறை அமைச்ச ருக்கும் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளியன்று பெரம்பலூர் ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு கோட்ட தலைவர் பி.ராஜ்குமார் தலைமை வகித் தார். கோட்டச் செயலாளர் சி.சுப்ரமணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.  கோரிக்கை மனுவில், “சாலைப் பணியா ளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்  காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண் டும். சாலைப் பணியாளர்களில் இறந்தோரின் வாரிசுகளுக்கு நெடுஞ்சாலைத் துறையிலேயே கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.  15 ஆண்டுகளுக்கும் மேலாக 200-க்கும்  மேற்பட்ட தகுதி பெற்ற சாலைப் பணியாளர் களுக்கு கோட்ட பொறியாளர்கள் அனுமதித்து ஆணை வழங்க வேண்டும்.  பத்து சதவீதம் விபத்துப்படி, சீருடை சலவைப் படி மற்றும் நிரந்தர பயணப்படி வழங்க வேண்டும்  உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளை பரிசீ லித்து நிறைவேற்றித் தர வேண்டும்” என தெரி விக்கப்பட்டுள்ளது. கோட்டப் பொருளாளர் பி. சுப்ரமணியன் நன்றி கூறினார்.