தஞ்சாவூர், நவ.5 - மல்லிப்பட்டினம் குடியிருப்பு பகுதி யில் குளம்போல் தேங்கி நிற்கும் மழை நீரால் அப்பகுதி மக்கள் அவதிய டைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி, மல்லிப்பட்டினம் காயிதே மில்லத் நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை முழுமையாக அமையவில்லை. ஏற்கனவே இருந்த சாலையை விட, புதிய சாலை உயரமாக இருக்கிறது. மேலும், வடிகால் வசதி இல்லாததால், மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதியடைந்துள்ள னர். சிறுமழைக்கே இப்பகுதியில் குளம் போல தண்ணீர் தேங்கி நிற்பதால், கொசுத்தொல்லை அதிகரிக்கிறது. இதுகுறித்து ஏற்கனவே வட்டார வளர்ச்சி அதி காரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனு குறித்து பரிசீலித்து, நடவடிக்கை எடுக்கப்படும் என தெரி வித்தனர். மேலும் ஊராட்சி மன்றத்திடமும் கோரிக்கை மனு வழங்கிய நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகளும், ஊராட்சி மன்றமும் அப்பகுதி மக்களின் கோரிக்கையை பரிசீலித்து உடனே நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.