districts

தரக்குறைவாகப் பேசும் அலுவலர் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்தில் புகார்

கும்பகோணம், ஏப்.22-

   தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் சரஸ்வதி பாடசாலை மேல் நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனா ளிகளுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

   கூட்டத்திற்கு கும்பகோணம் கோட்டாட்சியர் எஸ்.பூர்ணிமா தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் என். சுவாமிநாதன், தனி வட்டாட்சியர்கள் வி.பிரேமாவதி, ரவி மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், மாற்றுத்திறனாளி கள் கூறுகையில், ‘‘மாற்றுத்திறனா ளிகளுக்கு சிறப்பான சலுகைகளை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள் கின்றோம். ஒரு கால் பாதித்த மாற்றுத்  திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனம் வழங்க வேண்டும், அரசு  நிதியில் கட்டப்படும் வணிக வளா கங்களில் 5 சதவீதமும், அரசுப் பணி களில் 4 சதவீத இட ஒதுக்கீடு செய்யப் பட்டு, அதனை நிகழாண்டிற்குள் நிரப்ப வேண்டும்.

  மாற்றுத்திறன் கொண்ட மாணவர் களுக்கு வழங்கப்படும் கல்வித் தொகையை 2 மடங்காக உயர்த்தி வழங்க வேண்டும், அனைத்து பொதுத் தேர்தல்களிலும் மாற்றுத் திறனாளிகள் போட்டியிடுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும், தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்களுக்கு கால  வரன்முறை ஊதியம் வழங்குவதற் கான அரசாணையை வெளியிட  வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக் கான உரிமைச் சட்டம் குறித்து அனைத்து அலுவலர்களுக்கும் பயிற்சியளிக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தனர்.

 கோட்டாட்சியர் சமாதானம்

   அப்போது, நிலுவையிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை வழங்குவது குறித்து, மாற்றுத் திறனாளி நல அலுவலரி டம் கேட்டனர். அதற்கு கோட்டாட்சி யர், தஞ்சாவூருக்கு வாருங்கள் என்றார்.

    வெயிலின் தாக்கம் அதிகமாக  இருப்பதால் எங்களை அலைக்கழிக் காதீர்கள் என்று அவர்கள் கூறிய போது, தஞ்சாவூருக்கு வரமுடியாது  என்றால் உதவித் தொகை வழங்க முடியாது எனத் தெரிவித்தார். இத னைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடு படுவோம் என அறிவித்ததும், கோட் டாட்சியர் சமாதானம் செய்து வைத்தார்.

   மேலும், தஞ்சாவூரிலுள்ள மாற்றுத் திறனாளி அலுவல கத்திலுள்ள பெண் அலுவலர் மிகவும் தரக்குறைவாக பேசுவதையும், அலைக்கழிப்பதையும் தவிர்க்க வேண்டும் எனப் புகாரளித்தனர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் சங்கம் சார்பில் மாவட்ட துணை தலைவர் பழ.அன்புமணி, காமாட்சி, சாமிநாதன், பூபதி, பாரூக்,  அறிவழகன், ராஜேஸ்வரி, உள்ளிட்ட ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.