நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் பாலக்குறிச்சி ஊராட்சி கச்சரக்கோட்டகம் கிராமத்தில் புதிய மின் மாற்றி சேவையை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி தொடங்கி வைத்தார். நிகழ்வில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் லென்ஸ்காயா சிவபாதம், விவசாயிகள் சங்க கீழையூர் ஒன்றியத் தலைவர் கே.கிருஷ்ணன், மின் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்