districts

img

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், அக்.18 - தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பணப் பலன்களை பெறுவதில் சிக்கலை  ஏற்படுத்தும் ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை திட்டத்தை கைவிட வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். இத்திட்டத்தில் சத்துணவு சமையலர், உதவியாளர், அங்கன்வாடி உதவியாளர்களையும், அரசு ஊழி யர்களின் பெற்றோர்களையும் இணைக்க வேண்டும். கட்டணமில்லா சிகிச்சையை உத்தரவாதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட கருவூல அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர்  எஸ்.செங்குட்டுவன் தலைமை வகித்தார்.  மாநில துணைப் பொதுச் செயலாளர்  வெ.சோமசுந்தரம் துவக்கி வைத்து  உரையாற்றினார். மாவட்டச் செயலா ளர் செ.பிரகாஷ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். முன்னாள் மாநிலச் செயலாளர் எம்.சௌந்தரராஜன் நிறை வுரையாற்றினார். மாவட்டப் பொருளா ளர் வி.தெட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.

 திருச்சிராப்பள்ளி அரசு ஊழியர் சங்க திருச்சி மாவட்டக் கிளை சார்பில் மாவட்ட  கருவூல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பால்பாண்டி தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர் பழனிச்சாமி, மாவட்டப் பொருளா ளர் பாபு, அனைத்துத் துறை ஓய்வூதி யர் சங்க மாநிலச் செயலாளர் செந்தமிழ் செல்வன் ஆகியோர் பேசினர். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் பெரியசாமி நிறைவுரை யாற்றினார்.  நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அ.தி.அன்ப ழகன், மாவட்ட பொருளாளர் அந்து வண் சேரல், கூட்டுறவு துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். முத்துராஜா உள்ளிட்டோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். கரூர் அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் மாவட்ட  கருவூல அலுவலகம் முன்பு மாபெரும்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட  தலைவர் எம்.எஸ்.அன்பழகன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க  மாநிலத் துணைத் தலைவர் எம்.செல்வ ராணி, மாவட்டச் செயலாளர் பொன்.ஜெயராம், கல்வித்துறை நிர்வாக அலுவ லர்கள் சங்க மாநிலப் பொருளாளர் வினோத், மாநில செயற்குழு உறுப்பி னர் வ.கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.