தஞ்சாவூர், ஆக.7 - பேராவூரணி அருகே அலிவலம் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பி னர் நா.அசோக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளித் தலைமை ஆசிரியர் அடிக்கடி விடு முறை எடுப்பதாகவும், பள்ளிக்கு வரு வதில்லை எனவும் பொதுமக்கள் சிலர் புகார் தெரிவித்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அலி வலம் ஊராட்சியில் புதிய பாலம் அமைக் கும் பணிக்கு அடிக்கல் நாட்ட பேரா வூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் சென்றிருந்தார். அதனைத் தொடர்ந்து, அலிவலம் ஆதிதிராவிடர் நல அரசு தொடக்கப் பள்ளிக்கு ஆய்வு சென்றபோது பள்ளித் தலைமை ஆசிரியர் வீரமணி பணியில் இல்லை. இதுகுறித்து அங்கிருந்த உதவி ஆசிரியர் ராஜேஸ்வரியிடம் கேட்ட போது தலைமை ஆசிரியர் விடு முறையில் சென்றிருப்பதாக தெரி வித்தார். அப்போது அங்கிருந்த மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் நவநீதம் ஆறுமுகம் மற்றும் கிராம பொதுமக்கள், “பள்ளித் தலைமை ஆசிரியர் வீரமணி அடிக்கடி விடுமுறை எடுப்பதாகவும், பள்ளிக்கு வருவதில்லை எனவும், கையெழுத்திட்டு விட்டுச் சென்று விடுவதாகவும்” எம்எல்ஏவிடம் புகார் தெரிவித்தனர். மேலும் இப்பள்ளியில் 21 மாண வர்கள் படித்து வரும் நிலையில், குடி நீர் பிரச்சனை, கழிப்பறை பிரச்சனை இருக்கிறது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் வீரமணி, உயர் அலுவலர் கள் கவனத்திற்கு கொண்டு செல்வ தில்லை. மாணவர்கள் நலனில் அக் கறை செலுத்துவதில்லை எனவும் தெரி வித்தனர். இதையடுத்து, பேராவூரணி சட்டப் பேரவை உறுப்பினர் நா.அசோக் குமார், கல்வித்துறை உயர் அலுவ லரை அலைபேசியில் தொடர்பு கொண்டு, பொதுமக்கள் புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். தொடர்ந்து மாணவர்களிடம் காலை உணவுத் திட்டம், மதிய உணவு திட்டம் குறித்து கேட்டறிந்தார். அப்போது சமை யல் கூட கட்டடத்தில் சேதமடைந் திருந்த கதவுகளை சரிசெய்யுமாறு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அறி வுறுத்தினார். பள்ளிக்கு தலைமை ஆசிரியர் அடிக் கடி விடுப்பு எடுப்பதால், இப்பள்ளி யில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதாகவும், பள்ளியை மூடும் நிலைக்குச் சென்றுள் ளதாகவும், எனவே கல்வித்துறை அலு வலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர். அரசு ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசுப் பள்ளி களில் கல்வித்தரம், பராமரிப்பு கேள்விக் குறியாக இருக்கிறது. இதில் தமிழ் நாடு அரசு தலையிட்டு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் தொ டர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.