பாபநாசம், டிச.2- அமலாக்கத்துறை, ஒன்றிய அரசின் ஏவல் துறையாக இருக்கிறது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ-வு மான பேராசிரியர் ஜவாஹிருல்லா சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக் கையில், “குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத் தில் பணியாற்றிய அங்கித் திவாரி என்ற அம லாக்கத்துறை அதிகாரி, திண்டுக்கல்லில் தனி நபர் ஒருவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய போது, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினரால் கையும் களவுமாக பிடிபட்டிருக் கிறார். தமிழ்நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயரதி காரிகள் மீது ஒன்றிய அரசின் அமலாக்கத் துறை சோதனை தீவிரமாக விசாரணை நடை பெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில், இந்த சம்பவம் நடந்திருப்பது கவனத்திற்குரியது. விசாரணையில், நிலுவையில் உள்ள வழக்குகள் மீதான நடவடிக்கையை கைவிட உறுதியளித்து, திவாரி ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரியவந்துள்ளது. தென்னிந்தியா வில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் லஞ்ச ஒழிப்புத் துறையி னால் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. லஞ்ச ஊழலில் திளைத்துக் கொண்டிருக் கும் அமலாக்கத்துறை, ஒன்றிய அரசின் ஏவல் துறையாக மட்டுமே இருப்பது நகைப்புக்குரி யது” என தெரிவித்துள்ளார்.