districts

ஊழல் தடுப்புப்பிரிவு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

மதுரை, டிச. 26-  மதுரை அமலாக்கப்பிரிவு அலுவல கத்தில், ஊழல் தடுப்புப்பிரிவு அதிகாரி களை  பணி செய்ய விடாமல் தடுத்ததாக, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மீது மதுரை  மாநகரக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மதுரை அமலாக்கப்பிரிவு அலுவல கத்தில் அமலாக்கத்துறை அலுவலராக பணிபுரிந்து வந்த அங்கித் திவாரி திண்  டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற  போது டிசம்பர்  1ஆம் தேதி திண்டுக்கல்  மாவட்ட ஊழல் தடுப்புப்பிரிவு போலீசாரால்  கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து மதுரையில் உள்ள அமலாக்கப்பிரிவு அலு வலகத்தில் மதுரை ஊழல் தடுப்புப்பிரிவு  போலீசார்  சோதனையிட சென்றபோது அங்கு அமலாக்கப்பிரிவு உதவி இயக்குநர்  தலைமையில் ஊழியர்கள், ஊழல் தடுப்  புப்பிரிவு போலீசாரை சோதனையிடவிடா மல் தடுத்தனர். இதைத்தொடர்ந்து மாநக ரக் காவல்துறையைச் சேர்ந்த போலீசார் வரவழைக்கப்பட்டு, அமலாக்கப்பிரிவு ஊழியர்களுடன் தள்ளுமுள்ளு ஏற்பட் டதை தொடர்ந்து ஊழல் தடுப்புப்பிரிவு அதி காரிகள் மாலை 5 மணிமுதல் மறுநாள் காலை 7.30 மணி வரை தொடர் சோதனை யில் ஈடுபட்டனர்.  இந்த சோதனையில் ஏராளமான ஆவ ணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலை யில் மதுரை அமலாக்கப்பிரிவு அலுவல கத்தில் ஊழல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து சோதனை என்ற  பெயரில் ஆவணங்களை எடுத்துச்சென்ற தாகவும், 30-க்கும் மேற்பட்டோர் அத்துமீறி  நுழைந்ததாகவும் அவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும்   தமி ழக காவல்துறை இயக்குநருக்கு அம லாக்கப்பிரிவு சார்பில் டிசம்பர் 3ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் சோத னையிடச்சென்றபோது, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்களை தடுத்து நிறுத்தி பணியை செய்யவிடாமல் இடை யூறு ஏற்படுத்தியதாக மதுரை ஊழல் தடுப்புப் பிரிவு சார்பில் தல்லாகுளத்தில் புகார் அளிக்கப்பட்டது.   இதைத்தொடர்ந்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மீது மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளி யாகின. இதுதொடர்பாக தல்லாகுளம் காவல்நிலைய அதிகாரிகளிடம் கேட்ட போது, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மீது  வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் ஊழல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் அத்துமீறி நுழைந்ததாக,  அமலாக்கப்பிரிவு அதிகாரி கள், தமிழக காவல்துறை தலைமை இயக்குநரிடம் அளித்த புகார் மீது விசா ரணை நடத்தும்படி அதிகாரிகள் உத்தர விட்டுள்ளதால், அமலாக்கத்துறை அதிகாரி கள் தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் டிசம்பர் 26 ஆம் தேதி விசாரணைக்கு வரும்  படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக மாநக ரக்காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, அமலாக்கப்பிரிவு அலுவ லர் அங்கித் திவாரி லஞ்சம் வாங்கி கைது  செய்யப்பட்டது தொடர்பாக,  மதுரை அம லாக்கப்பிரிவு அலுவலகத்தில், ஊழல்  தடுப்புப்பிரிவு அதிகாரிகள் சோதனை யிடச்சென்றபோது அமலாக்கப்பிரிவு அதி காரிகள் மற்றும் ஊழியர்கள் தடுத்து ஊழல்  தடுப்புப்பிரிவினரை பணி செய்யவிடாமல் தடுத்துள்ளனர். இதுதொடர்பாக ஊழல்  தடுப்புப்பிரிவினர் அளித்தப் புகாரின்பேரில் மதுரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மீது, தல்லாகுளம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குத் தொடர்பான முழு விவரங்களும் விரைவில் வெளியாகும் என்றனர்.