தூத்துக்குடி, மார்ச் 2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்ரல் 2 முதல் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டு நிதியாக கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் ரூ.4 லட்சத்து 65 ஆயிரம் வழங்கப்பட்டது. அகில இந்திய மாநாட்டு நிதி அளிப்பு சிறப்பு பேரவை மார்ச் 2 ஞாயி றன்று தூத்துக்குடி மாசிலாமணி புரத்தில் கட்சியின் மாவட்டக்குழு அலு வலகத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநாட்டு நிதி 4 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயை அகில இந்திய மாநாட்டு வரவேற்புக்குழு தலைவரும் மத்தியக்குழு உறுப்பின ருமான கே.பாலகிருஷ்ணனிடம் இடைக்கமிட்டி செயலாளர்கள் வழங்கினர். இதில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் பி.பூ மயில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ரசல், கு.ரவீந்திரன், ஆர்.பேச்சி முத்து, எஸ் அப்பாதுரை, தா.ராஜா, த.சண்முகராஜ், கே.சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.