தஞ்சாவூர், ஏப்.26- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத் துள்ள வன்னியடி இளங் கார்குடி அம்மன் கோவில் தெருவில் 200-க்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசிக் கி ன்றனர். இங்குள்ள மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி பழுதடைந்துவிட் டது. தொட்டியை சுத்தம் செய்து பல ஆண்டுகளாகி விட்டது. சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டும் பயன்பாட்டில் இல்லாமல் பழுதடைந்து விட்டது. சுடு காடு மற்றும் இடுகாட்டில் இயங்கி வந்த அடிபம்ப் மாயமாகி விட்டது. ஆதி திரா விடர் நலப் பள்ளி அருகே குப்பைகள் கொட்டப்படுதால சுகாதாரச் சீர் கேடு நிலவுகிறது. ஆதி திராவிடர் பள்ளி யைச் சுற்றி சுற்றுச் சுவர் எழுப்பவேண்டும் என வன்னியடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.