திருவாரூர், பிப்.3- திருவாரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் சார்பாக, திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள எஸ்.எஸ்.நகரில், மாவட்டத்தின் 2 ஆம் ஆண்டு புத்தக திருவிழா துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சி.பிரியங்கா தலைமை வகித்தார். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் புத்தகத் திருவிழா அரங்கத்தை திறந்து வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த புத்தகத் திருவிழா, பிப்.2 முதல் 11 வரை நடைபெறுகிறது. தினந்தோறும் தலைசிறந்த அறிஞர்களின் சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. குழந்தைகள் பொழுதுபோக்கு அம்சங்களுடன் புத்தக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் நாள் கருத்தரங்க நிகழ்வில் பேச்சாளர் மோகனசுந்தரம் “சிந்தனை செய் மனமே” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். எழுத்தாளர் கு.இலக்கியன் “தமிழ் நிலத்தின் கதைகள்” என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். முன்னதாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) லதா, திருவாரூர் நகர்மன்ற துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்கள், ஆசிரியர்கள், புத்தக வாசகர்கள் ஆர்வமுடன் தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
மயிலாடுதுறை/திருவாரூர், பிப்.3- மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் 2 ஆவது புத்தகத் திருவிழா வெள்ளியன்று மாலை கோலாகலமாக துவங்கியது. மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி யில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் 2 ஆவது புத்தகத் திருவிழாவை மயிலாடு துறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மு.ஷபீர் ஆலம் ஆகி யோர் வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தனர். புத்தகத் திருவிழாவினை துவக்கி வைத்து கூடுதல் ஆட்சி யர் பேசுகையில், “இப்புத்தகத் திரு விழாவில் தமிழகத்தின் முன்னணி பதிப்பகங்களின் 80 புத்தக விற்பனை அரங்குகள், தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை பொது மக்கள் அறியும் வகையில் திட்ட விளக்க கண்காட்சி அரங்குகள் இடம்பெற்றுள்ளன. மாணவர் களுக்கு போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து வகை யான புத்தகங்களும், பொது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள தேவையான புத்தகங் களும், வாசிப்பாளர்களுக்கான புத்தகங்களும் கிடைக்கிற வகையில் இப்புத்தகத் திருவிழா வானது மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், புகழ்பெற்ற 20 பேச்சா ளர்களின் சொற்பொழிவுகளும், பட்டிமன்றம், நாடகம், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக் கான போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. புத்தகத் திருவிழாவிற்கு வரு பவர்களுக்கு தினமும் பரிசு கூப்பன் வழங்கப்படும். அதில் குலுக்கல் முறையில் தேர்வு செய் யப்படுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். எனவே அனை வரும் இந்த புத்தகத் திருவிழா விற்கு வந்து சிறப்பிக்க வேண்டும்” என்றார். தொடர்ந்து மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் பேசுகை யில், “நூற்றுக்கணக்கான நூல கங்கள் போல் இப்புத்தகத் திரு விழா துவக்கப்படுகிறது. இதை பயன்படுத்தி நம் அறிவை ஆற்றலை மேம்படுத்திக் கொள்வது நமது கடமை. வீட்டில் உள்ள பெற்றோர்களும், பெரியோர் களும், பள்ளி கல்லூரிகளில் பணி யாற்றும் ஆசிரியர்களும் இப்புத்த கத் திருவிழாவிற்கு வர வேண்டும். இளைய தலைமுறையினரை அழைத்து வர வேண்டும்” என்றார். பூம்புகார் சட்டமன்ற உறுப்பி னர் நிவேதா முருகன் ஆற்றிய உரையில், “புத்தகங்கள் வாசிப் பதை பழக்கி கொள்ள வேண்டும். புத்தகம் அறிவு கூர்மையை கொடுக் கும். எல்லா காலங்களிலும் புத்த கம் கைக் கொடுக்கும். தமிழ்நாடு முதலமைச்சர் மதுரையில் மிகப் பெரிய நூலகத்தை திறந்து வைத்துள்ளார். அரசின் திட்டங் கள் தொடர்பாக இங்கு கண் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. அனைத்து தரப்பு மக்க ளும் இப்புத்தகத் திருவிழாவை பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்றார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே. மீனா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் மு. மணிமேகலை, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சேகர், முதன்மை கல்வி அலுவலர் அம்பி காபதி, மயிலாடுதுறை ஒன்றியக் குழு தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆட்சியர் சிறப்புரை புத்தகத் திருவிழாவின் 2 ஆம் நாள் நிகழ்ச்சியில் ‘உயரத்தை அடைந்தது எப்படி’ என்ற தலைப் பில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, முதன்மை கல்வி அலுவலர் அம்பி காபதி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கண்மணி, மயி லாடுதுறை வருவாய் கோட்டாட்சி யர் வ.யுரேகா, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா ஆகி யோர் பங்கேற்றனர்.