பாபநாசம், மார்ச் 27 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தஞ்சாவூர்-கும்பகோணம் பிரதான சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்தது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு புது அன்னுக்குடி பாசன வாய்க்கால் மீது சாலையை ஒட்டி கட்டப்பட்டிருந்த தடுப்புச் சுவர் சேதமடைந்து விட்டது. தடுப்புச் சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் வாகனங்க ளில் செல்பவர்கள், சற்றுத் தடு மாறினால்கூட வாய்க்காலில் விழுந்து விபத்து நேரிடும். எனவே பொதுப் பணித் துறையினர் உடனே நடவடிக்கை எடுத்து, புது அன்னுக்குடி வாய்க்கால் மீது சாலையை யொட்டி தடுப்புச் சுவர் அமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.