districts

img

தரங்கம்பாடி மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ ஆறுதல்

மயிலாடுதுறை,  அக்.16 - மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடி அருகே பெருமாள்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த பூவரசன்  (25) என்பவருக்கு சொந்த மான பைபர் படகில் அவரும்,  அதே பகுதியை சேர்ந்த தென்னரசன் (30), ஆறு முகம் (60), நிவாஸ் (24) மற்றும் சந்திரபாடியை சேர்ந்த அருள்ராஜ் (34), சரத் (32)  ஆகிய மீனவர்களும் கடந்த  அக்.12 ஆம் தேதி மீன்பிடிக்க  கடலுக்கு சென்றனர். வெள்ளியன்று இரவு கோடியக்கரையில் இருந்து  20 நாட்டிகல் கடல் தூரத்தில்  இலங்கை எல்லை அருகே  மீன் பிடித்துக் கொண்டி ருந்த போது, அங்கு 4 படகு களில் வந்த இலங்கை கடற் கொள்ளையர்கள் மீனவர் களின் படகின் மீது மோதி னர். மேலும் மீனவர்களை தாக்கிவிட்டு, படகில் இருந்த மீன்கள், வலைகளை பறித்துச் சென்றனர்.  தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் சனிக்கிழமை அதிகாலை கரை திரும்பி னர். காயம் அடைந்த மீன வர்கள் தரங்கம்பாடி அரசு  மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், மேல் சிகிச்சைக்காக காரைக்கால் கிளிஞ்சல்மேட்டிலுள்ள விநாயகா மிஷன் மருத்து வக் கல்லூரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர். இந்நிலையில், பாதிக்கப் பட்ட மீனவர்களை பூம் புகார் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் நிவேதா முருகன், நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தாக்குதல் குறித்து மீனவர் பூவரசன் கொடுத்த புகாரின் பேரில், தரங்கம்பாடி கட லோர காவல் படையினர் விசாரித்து வருகின்றனர்.