திருச்சிராப்பள்ளி, ஏப்.29-
தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றி பணிநிறைவு பெறும் சிஐடியு மாநில துணைத் தலைவரும், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத்தலைவருமான எஸ்.ரெங்கராஜன் மற்றும் சிஐடியு திருச்சி மாவட்ட துணைத்தலைவரும், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் திருச்சி வட்ட செயலாளருமான எஸ்.கே.செல்வ ராஜ் ஆகியோரின் பணிநிறைவு பாராட்டு விழா சனிக்கிழமை அன்று திருச்சியில் நடை பெற்றது.
விழாவிற்கு சங்க திருச்சி மண்டலச் செய லாளர் அகஸ்டின் தலைமை வகித்தார். பணி நிறைவு பெறும் தோழர்களை, தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் உள்பட மாநில, திட்ட, கோட்ட, சகோதர தொழிற்சங்க நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர்.
தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத்தலைவர் எஸ்.ரெங்கரா ஜன் மற்றும் தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் திருச்சி வட்டச் செயலாளர் எஸ்.கே.செல்வராஜ் ஆகியோர் ஏற்புரை யாற்றினர்.
பின்னர் தோழர் ரெங்கராஜன், மா ர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிதியாக ரூ.30 ஆயிரத்தை மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா ஆகியோரிடம் வழங்கினார். எஸ்.கே.செல்வ ராஜ் சிஐடியு நிர்மல் பள்ளிக்கு நிதியாக ரூ.5 ஆயிரம் வழங்கினார்.