அரியலூர், நவ.24 - அரியலூர் மாவட்ட விளையாட்டு உள் அரங்கில், மாவட்ட வருவாய் அளவிலான வாள் சண்டைப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை சார்பில் 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவி களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்ட போட்டியில், மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, தனியார் மெட்ரிக். பள்ளி கள் என மொத்தம் 40 பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு அன்று மாலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி சான்றிதழ் களை வழங்கினார். மாவட்ட கல்வி அலு வலர் ஜெயா கலந்து கொண்டார்.