தஞ்சாவூர், ஜன.5 - தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம் பொறுப்பேற்றார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த இவர் பி.எஸ்ஸி., எம்.ஏ., பி.எல். படித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் கடலூர் காவல் கண்கா ணிப்பாளராக இருந்த இவர் பணி மாறுதலில் தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக டிசம்பர் 29 ஆம் தேதி நியமிக்கப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டக் கண்கா ணிப்பாளராக இருந்த ஆஷிஷ் ராவத் பணிமாறுதலாகி சிவகங்கை மாவட்டத்துக்கு சென்றார்.