நாகர்கோவில், பிப்.20- நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் லாயம் விலக்கு பகுதி யில் தனியாருக்கு சொந்தமான கிளவுஸ் குடோன் உள்ளது. கையுறை மற்றும் பல்வேறு உபகரணங்களுக்கு உள்ள பிளாஸ் டிக்கிலான பொருட்கள் இந்த குடோனில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலை யில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி யளவில் அந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு புகைமண்டலமாக காட்சி யளித்தது. இதையடுத்து அங்கு பணியில் இருந்தவர்கள் மற்றும் பொது மக்கள் தீயை அணைக்க முயன்றனர் .ஆனால் கடுமை யான வெயில் மற்றும் காற்றின் வேகம் காரணமாக தீ குடோன் முழுதும் பரவ தொ டங்கியது. இதையடுத்து நாகர் கோவில் தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடோ னில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் மற்றும் கையுறைகள் எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.