திருச்சிராப்பள்ளி, ஜன.11 - திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பணிபுரிந்து வந்தனர். கொரோனா நோய்த் தொற்று காலத்திலும் அர்ப்பணிப் போடு பணியாற்றினர். இந்நிலையில் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி முதல் 28 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களது குடும்பம் இந்த வேலையை மட்டுமே நம்பியுள்ளது. எனவே இவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் காப்பீட்டு திட்டத் தின் கீழ் மீண்டும் வேலை வழங்க கோரி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை மருத்துவமனை முன்பு கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் ராமர் தலைமை வகித் தார். போராட்டத்தை சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் துவக்கி வைத்தார். போராட்டத்தை விளக்கி சிஐடியூ நிர்வாகி கள் செல்வி, பால்பாண்டி, ஜெயபால், மணிமா றன், சீனிவாசன் ஆகியோர் பேசினர்.