districts

img

தெரு மின்விளக்கு மின்கம்பம் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புளியந்துறை கிராமத்தில் தெரு மின்விளக்கு மின்கம்பம் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. சாலையோரம் உள்ள இந்த மின்கம்பம் திடீரென சாய்ந்து விழுந்தால், சாலையில் செல்பவர்களும், சாலையை ஒட்டி அப்பகுதியில் உள்ள வயலுக்கு செல்பவர்களும் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. எனவே எந்நேரத்திலும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய இந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.