மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்
திருச்சிராப்பள்ளி, செப்.31- அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கிட, திருச்சி மாவட்டத் தில் மண்டல அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடை பெற உள்ளது. இம்முகாம் செப்.6 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கலையரங்கம் திருமண மண்டபம், மெக்டொ னால்டு ரோடு, கன்டோன்மெண்ட் (மத்திய பேருந்து நிலை யம் அருகில்), திருச்சி என்ற முகவரியில் நடைபெற உள்ளது. இதில், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நாகப் பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேற்படி வேலைவாய்ப்பு முகாமிற்கு வரும், வேலை வாய்ப்பளிக்கும் தனியார் நிறுவனங்கள் வலைதள விண்ணப்பத்தில் பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் வேலை நாடும் மாற்றுத்திறனாளிகள் வலைதள விண்ணப்பம் வாயிலாக பதிவு செய்தோ அல்லது உரிய ஆவ ணங்களான மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடை யாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை, ஆதார் அட்டை, கல்விச்சான்று ஆகியவற்றின் நகல்கள், மார்பளவு புகைப்படம், பணி அனுபவச் சான்று மற்றும் தன் விபரம் குறிப்பு ஆகியவற்றுடன் முகாம் நடைபெறும் நாளிலும் நேரில் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்.0431-2412590, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையம் தொலைபேசி எண்.0431-2413510 ஆகிய வற்றில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
காலிப் பணியிடங்களை நிரப்புக! சத்துணவு ஊழியர் சந்திப்பு இயக்கம்
தஞ்சாவூர், செப்.1 - தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், ஒன்றியத் தலைநகரில் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊழியர் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. இதில், அந்தந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதையொட்டி, தஞ்சாவூரில் ஊராட்சி ஒன்றிய அலுவல கம் முன்பு நடைபெற்ற இயக்கத்திற்கு சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் லதா தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர் தி.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்து கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். சத்துணவு மையங்களில் உள்ள 59 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதி யம், அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். ஊழியர்கள் ஓய்வு பெறுகிற நாளில் அவர்களுக்கு உரிய பணப் பயன் களை அன்றைய தினமே வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறுகிற காலங்களில் ஒட்டுமொத்த தொகையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய ஆணைய ரிடம் மனு அளிக்கப்பட்டது.
கும்பகோணம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்களின் 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி, ஊழியர்களின் சந்திப்பு இயக்கம் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில் நடைபெற்றது. சந்திப்பு இயக்கத்திற்கு ஒன்றியத் தலைவர் மணிமே கலை தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ராமா மிர்தம், திராவிடச்செல்வி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்க உரையாற்றினர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஊழியர் சந்திப்பு இயக்க மகஜர், திருவிடைமரு தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கப் பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருவிடைமருதூர் வட்டத் தலைவர் கண்ணன், தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் மாநில அமைப்பு செயலாளர் ஏ. விஸ்வேஷ்வரன் ஆகியோர் நிறைவுரையாற்றினர்.
பழுதடைந்த மண்ணியாற்றுப் பாலம் சீரமைக்கப்படுமா?
பாபநாசம், செப்.1 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் கொள்ளிடக் கரையை ஒட்டியுள்ள ஊராட்சி கோவிந்த நாட்டுச் சேரி. இந்த ஊராட்சியில் 40 ஆண்டுகளைக் கடந்த மண்ணி யாற்றுப் பாலம் பழுதடைந்து எந்நேரத்திலும் இடியும் நிலை யில் உள்ளது. இந்த ஊராட்சியைச் சேர்ந்த பட்டுக்குடி, கூட லூர், புத்தூர், குடிகாடு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மட்டு மல்லாது, அருகிலுள்ள வீரமாங்குடி, உம்பளாப் பாடி ஊராட்சி களைச் சேர்ந்த மக்களும் இந்தப் பாலத்தை பயன்படுத்து கின்றனர். ஏராளமான வாகனங்கள் இந்தப் பாலம் வழியே சென்று வருகின்றன. கொள்ளிடத்தில் தண்ணீர் இல்லாதபோது, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் தொழில், வேலைவாய்ப்பு, கல்விக்காக இந்த பாலத்தை கடந்து வருகின்றனர். பழுத டைந்த இந்தப் பாலத்தை இடித்து விட்டு, புதிதாக தரமான பாலம் கட்ட வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள். இதேபோன்று பட்டுக்குடிக்கு பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும். இதனால் இப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் பெரிதும் பயன்பெறுவர். ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் ஏற்படுத்த வேண்டும். புத்தூர், கூடலூர், குடிகாடு, நாயக்கர் பேட்டை பாரதி நகரில் சமுதாயக் கூடம், நாயக்கர்பேட்டை மயா னத்தில் தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் இதில் உரிய கவனம் செலுத்துமா?
கொத்தங்குடி தொகுப்பு வீடு இடிந்து விழுந்து இருவர் காயம்
கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை கும்பகோணம், செப்.1- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொத்தங்குடி ஊராட்சியில், ஏழாவது வார்டு காலனி தெருவில், சிலம்பரசன், கமலா மற்றும் குடும்பத்தி னர் 1977 ஆம் ஆண்டு கட்டப்பட்ட தொகுப்பு வீட்டில் குடியிருந்து வரு கின்றனர். இவர்கள் பலமுறை ஊராட்சி மன்றத்திலும், ஊராட்சி ஒன்றிய அலுவல ரையும் சந்தித்து, தாங்கள் குடியிருக்கும் வீட்டை சீர மைத்து தரவும் அல்லது புதிய வீட்டுக்கு அனு மதி வழங்க வேண்டுமென பலமுறை முறையிட்டுள்ள னர். இந்நிலையில், ஞாயி றன்று அதிகாலை, சிலம்ப ரசன், அவரது மனைவி கமலா மற்றும் குழந்தைகள் உறங்கிக் கொண்டிருந்த போது, திடீரென இந்த பழமையான தொகுப்பு வீட்டின் கான்கிரீட் மேற் கூரை இடிந்து விழுந்தது. இதில் சிலம்பரசன் மற்றும் கமலா ஆகியோர் காயம டைந்த நிலையில், அவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். குழந்தைகளுக்கு எவ்வித காயமும் இல்லை. இதுகுறித்து பாதிக் கப்பட்ட குடும்பத்தினர் தெரி விக்கையில், “சுமார் 1977 இல் கட்டப்பட்ட தொ குப்பை வீட்டில் குடியிருந்து வருகிறோம். இதனை சீர் செய்யவும் அப்புறப்படுத்தி புதிய வீடு வழங்கவும் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொ டுத்தும் இதுவரை கிடைக்க வில்லை. வேறு வழியின்றி பழுதடைந்த வீட்டில் குடி யிருக்கிறோம். தற்போது எங்கள் உயி ருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், மேற்கூரை இடிந்து விழுந்து விட்டது. எனவே உடனடியாக அதி காரிகள் பார்வையிட்டு, வீட்டை அப்புறப்படுத்தி புதிய வீடு கட்டுவதற்கு உத்த ரவு வழங்க வேண்டும்” என்றனர்.
நகைக்கு மெருகூட்டுவதாக மோசடி: வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது
தஞ்சாவூர், செப்.1- தஞ்சாவூரில் நகைக்கு மெருகூட்டுவதாகக் கூறி 9 கிராம் நகையை மோசடி செய்த 2 வட மாநில இளைஞர்களைக் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். தஞ்சாவூர் அருகே விளார் பொட்டுவாச்சாவடி சாலையைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மனைவி கவிதா (46). இவரது வீட்டுக்கு வியாழக்கிழமை வந்த 2 வட மாநில இளைஞர்கள் பித்தளை பாத்திரத்தை மெருகூட்டித் தருவதாகக் கூறினர். இதை வேண்டாம் என கவிதா கூறியும், 2 இளைஞர்கள் வற்புறுத்தி பித்தளை பாத்திரத்தை வாங்கி மெருகூட்டிக் கொடுத்தனர். இதேபோல, வெள்ளிப் பொருள்களும் மெருகூட்டுவதாக இருவரும் கூறியதை நம்பிய கவிதா கொலுசை கொடுத்தார். அதை மெருகூட்டிய பிறகு தங்க நகையை இருவரும் கேட்டனர். இதையடுத்து கவிதா தனது 24 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியையும், தனது மகனின் 26 கிராம் தங்கச் சங்கிலியையும் கொடுத்துள்ளார். இந்த இரு சங்கிலிகளையும் இருவரும் மெருகூட்டி கவிதாவிடம் கொடுத்துவிட்டுச் சென்றனர். பின்னர், எடை குறைவதாக சந்தேகப்பட்ட கவிதா அருகிலுள்ள அடகுக் கடைக்கு சென்று இரு தங்கச் சங்கிலிகளையும் தராசில் இட்டு பார்த்தார். அப்போது 9 கிராம் எடை குறைவாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தில் கவிதா புகார் செய்தார். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி, இந்த மோசடியில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வி.அனந்த்குமார் (26), ஆர்.ரகுகுமார் (21) ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
விருதுநகர் சந்தை பாமாயில், பாசிப்பயறு விலை கடும் உயர்வு; மல்லி, துவரை, உளுந்தம் பருப்பு விலை சற்று குறைவு
விருதுநகர், செப்.1- விருதுநகர் சந்தையில் பாமாயில் விலையானது திடீரென உயர்த்தப் பட்டுள்ளது. துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாசிப்பருப்பு விலையானது சற்று குறைந்து காணப்பட்டது. விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வரு கிறது. அதன் விபரம் வருமாறு : பாமயிலின் விலை கடந்த வாரம் 15 கிலோ ரூ.1490 என இருந்தது. இந்த வாரம் டின் ஒன்று க்கு ரூ.70 திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ரூ.1560 என விற்கப்படுகிறது. முண்டு வத்தல் கடந்த வாரம் ரூ.11 ஆயிரம் முதல் 15ஆயிரம் வரை விற்கப் பட்டது. இந்த வாரம் சந்தைக்கு வரத்து அதிகரித்த காரணத்தால் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.10ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை விற்ப னையாகிறது. மல்லி 40 கிலோ நாடு வகை கடந்த வாரம் ரூ.3ஆயிரம் முதல் ரூ.3,500 வரை விற்கப் பட்டது. இந்நிலையில், உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து தற்போது சந்தைக்கு வரத்து அதிகரித்ததால் மூட்டை ஒன்றுக்கு ரூ.200 வரை குறைக்கப்பட்டுள்ளது. எனவே மூட்டை ஒன்று ரூ.2800 முதல் ரூ.3 ,300 என விற்பனை செய்யப்படுகிறது. துவரம் பருப்பு நயம் 100 கிலோ கடந்த வாரம் ரூ.15ஆயிரம் முதல் ரூ.15,200 வரை விற்கப்பட்டது. இந்த வாரம் மூட்டை ஒன்று க்கு ரூ.100 மட்டும் குறைக்கப்பட்டு ரூ.14,900 முதல் 15,100 வரை விற்கப்படுகிறது. இதேபோல் துவரம் பருப்பு புதுசு நாடு வகை கடந்த வாரம் ரூ.10,800க்கு விற்கப் பட்டது. இந்த வாரம் மூட்டைக்கு ரூ.300 குறைந்துள்ளது. எனவே, ரூ.10,500 என விற்பனையாகிறது. தொலி உளுந்தம் பருப்பு 100 கிலோ கடந்த வாரம் ரூ.9800 என விற்ற நிலையில் மூட்டை ஒன்றுக்கு தற்போது ரூ.200 குறைந் துள்ளது. எனவே, ரூ9600 என விற்கப் படுகிறது. உளுந்து லயன் வகை கடந்த வாரம் ரூ.9300 முதல் 9500 வரை விற்ற நிலையில் மூட்டைக்கு ரூ.100 குறைந்து, தற்போது ரூ.9200 முதல் 9,300 க்கு விற்பனையாகிறது. பாசிப் பயறு நாடு வகை 100 கிலோ கடந்த வாரம் ரூ.8300 முதல் ரூ8700 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் திடீரென மூட்டை ஒன்றுக்கு ரூ.400 வரை உயர்த்தப் பட்டுள்ளது. எனவே, ரூ.8700முதல் ரூ.8900 வரை விற்கப்படுகிறது. அதேவேளையில் பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
சிவகங்கை மாவட்ட மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி
சிவகங்கை ,செப்.1 தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 11.09.2024 புதன்கிழமை யன்றும், தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 12.09.2024 வியாழக்கிழமையன்றும் சிவகங்கை மாவட்டத்தில் செயற்பட்டுவரும் அனைத்துப் பள்ளிகளில் (அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் (பதின்மப் பள்ளி கள் உள்பட) பயின்று வரும் மாணாக்கர்க ளுக்கும் (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு முடிய) மற்றும் அனைத்துக் கல்லூரிகளில் (அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனி யார் கலைக்கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், ஆசி ரியர் பயிற்சிக் கல்லூரிகள், பல்தொழில் நுட்பக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரி கள் முதலியன) பயின்றுவரும் மாணாக்கர்க ளுக்கும் தனித்தனியே மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் சிவகங்கை மருது பாண்டியர் நகர், அரசு மேல்நிலைப்பள்ளி வளாக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிய ருக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித் தனியே முதல் பரிசாக ரூ.5,000/- மும், இரண்டாம் பரிசாக ரூ.3,000/-மும், மூன்றாம் பரிசாக ரூ.2,000/- மும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பெற உள்ளன. அத்துடன் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுள் சிறப்புடன் திறமையை வெளிப்படுத்தும் அரசுப்பள்ளி மாணாக்கர்கள் இருவரை மட்டும் தெரிவு செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2,000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கபெற உள்ளது. 11.09.2024 மற்றும் 12.09.2024 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ள பேச்சுப் போட்டிகளில், பள்ளி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டிகள் முற்பகல் 9.00 மணிய ளவில் தொடங்கியும், கல்லூரி மாணாக்கர்க ளுக்கான பேச்சுப்போட்டிகள் பிற்பகல் 2.00 மணியளவில் தொடங்கியும் நடத்தப்பெற உள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் செயற்பட்டு வரும் பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர் மட்டுமே இப்போட்டி களில் பங்கேற்க முடியும். இவ்விரு போட்டிக ளுக்கான விதிமுறைகள் (தலைப்புகளுடன்) பங்கேற்புப் படிவங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் /கல்லூரிக் கல்வி இணை இயக்குநருக்கு அனுப்பப் பெற்றுள்ளன. எனவே, மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ள மாணாக்கர்கள் உரிய பங்கேற்புப் படி வத்தைப் பூர்த்தி செய்து பள்ளித் தலைமை யாசிரியர் / கல்லூரி முதல்வர் பரிந்துரை யுடன் ஒப்பமும் பெற்று சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் அளித்து போட்டிகளில் பங்கேற்கலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு சிவ கங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரை நேரிலோ, அல்லது 04575-241487 என்ற தொலைபேசி எண் வாயி லாகவோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சாலையோர வியாபாரிகளுக்கு இலவச விற்பனை வண்டி வழங்கிடுக!
சாத்தூர், செப்.1- தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வெண்டிங் கமிட்டி தேர்தலை ஒரே நாளில் நடத்த வேண்டும், சட்டத்தை மீறி சாலையோர வியாபாரிகளை காவல்துறையினர் மூலம் அப்புறப்படுத்தக் கூடாது. இலவச விற்பனை வண்டி அனைவருக்கும் வழங்க வேண்டும். நிபந்தனையற்ற கடன் ரூ.50 ஆயிரம் வங்கிகள் மூலம் வழங்க வேண்டும் என சிஐடியு- விருதுநகர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்க அமைப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. சாத்தூரில் சிஐடியு சாலையோர வியாபாரி கள் சங்கத்தின் மாவட்ட அளவிலான அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட சாலையோர வியாபார தொழிலாளர் சங்க மாவட்ட அமைப்பு பேரவை, சாத்தூர் பி. ராமமூர்த்தி நினைவகத்தில் நடை பெற்றது, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே. விஜயகுமார் தலைமை தாங்கினார். எம்.பாண்டி யன் முன்னிலை வகித்தார் . சிஐடியு மாவட்ட செய லாளர் பி. என்.தேவா துவக்கி வைத்து பேசி னார். முடிவில், சாலையோர வியாபாரிகள் சங்க மாநில நிர்வாகி சந்தியாகு சிறப்புரையாற்றினார். தலைவராக எம்.பாண்டியன், செயலாளராக வி.ஆர். செல்லச்சாமி, பொருளாளராக சந்தன மாரி ஆகியோர் உட்பட 7 பேர் கொண்ட நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டது, மேலும் இதில், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம். பிச்சைக்கனி,மாவட்ட குழு உறுப்பி னர்கள் மனோஜ்குமார், முகமது அலிஜின்னா, பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.