districts

சிறப்பு கால்நடை முகாம்

 பாபநாசம், பிப்.11 - தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு  கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே இராமானுஜபுரத்தில் நடைபெற் றது. வியாழனன்று நடைபெற்ற முகாமில் கால்நடைகளுக்கு சினை ஊசி, சினைப் பரிசோதனை, குடற்புழு நீக்கம், ஆண்மை  நீக்கம், பொது சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமை முன்ன தாக ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி துவக்கி  வைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் கற்பகம் தலைமை  வகித்தார். இதில் கால்நடை உதவி மருத்துவர்கள் கபிஸ்தலம்  வடிவேலன், ஆதனூர் சரவணன், ஆய்வாளர்கள், உதவியா ளர்கள் ஆர்.வி.எஸ் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோட்டம் ஆவுடை யார்கோவில் ஊராட்சி ஒன்றியம் குன்னூர் கிராமம் ஊராட்சி  ஒன்றிய-தொடக்க பள்ளி அருகில் கால்நடை பராமரிப்புதுறை சார்பாக சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் குன்னூர் ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து தலை மையில் நடைபெற்றது. ஆவுடையார்கோவில் கால்நடை உதவி  மருத்துவர் முத்துதுரை தலைமையில் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.