தஞ்சாவூர், டிச.10 - தஞ்சாவூர் - விழுப்புரம் இரட்டை வழி அகல ரயில் பாதை திட்டம் தற்போதைக்கு சாத்தியமில்லை என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தெரி வித்தார். தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை பய ணிகள் குளிரூட்டப்பட்ட கட்டண அறை, இருப்பு பாதை காவலர்கள் ஓய்வறை ஆகியவற்றை திறந்து வைத்தும், பல்வேறு கட்டமைப்புப் பணிகளை நேரில் பார்வை யிட்டும் ஆய்வு செய்தார். தொடர்ந்து தஞ்சாவூர் நாடாளு மன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி ரயில் உபயோகிப்பா ளர்கள் சங்கத்தினர் தஞ்சாவூர் எம்.எல்.ஏ., டி.கே.ஜி. நீலமேகம் சார்பிலும் பல்வேறு ரயில் வசதிகள் கேட்டு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் ஜான்தாமஸ் கூறு கையில், “திருவாரூர் - காரைக்குடி இடையே வரும் ஜனவரி மாத இறுதியில் வழக்கம் போல் பயணிகள் ரயில் இயக்கப்படும். இந்த தடத்தில் விரைவு ரயில்கள் இயக்குவது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை. தஞ்சாவூர் - விழுப்புரம் இடையே இரட்டை வழி அகலப் பாதை வேண்டுமென்றால் 70 சதவீதம் சரக்கு ரயில் போக்குவரத்து இருக்க வேண்டும். ஆனால் அந்த அளவுக்கு சரக்கு ரயில் போக்குவரத்து இல்லாததால், இந்த திட்டத்துக்கு தற்போது வாய்ப்பில்லை. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்களில் சில தற்போது இயக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மீண்டும் ஒவ்வொன்றாக இயக்கப்படும்” என்றார்.
பழநிமாணிக்கம் கூறுகையில், தஞ்சாவூர் ரயில் நிலை யத்தில் அனைத்து நடைமேடைகளில் மேற்கூரையும், சுரங்கப்பாதையும் அமைக்க வேண்டும். அதில் லிப்ட் வசதியும் வேண்டும். திருச்சி - சென்னை சோழன் சூப்பர் பாஸ்ட் விரைவு ரயிலின் பயண நேரத்தை குறைக்க வேண்டும். திருவனந்தபுரம் - திருச்சி விரைவு ரயிலை தஞ்சாவூரிலிருந்து இயக்க வேண்டும். காரைக் கால் - எர்ணாகுளம் விரைவு ரயிலில் கூடுதல் ஏசி பெட்டி கள் இணைக்க வேண்டும். மதுரை - சென்னை வாராந் திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என பொது மேலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார். அறந்தாங்கி டிவிசன் ரயில் கன்ஸ்யூமர் அசோசி யேசன் செயலாளர் ஏ.பி.ராஜ்குமார் கூறுகையில், “காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதையில் தாம்ப ரம் - செங்கோட்டை விரைவு ரயில், வேளாங்கண்ணி - எர்ணாகுளம் விரைவு ரயில், காரைக்குடி - சென்னை விரைவு ரயில், வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில் களை இயக்க வேண்டும். மயிலாடுதுறை - மதுரை வழித் தடத்தில் அறந்தாங்கி வழியாக தினசரி பயணிகள் ரயில் இயக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தியதாக தெரிவித்தார். தஞ்சாவூர் ரயில் பயணிகள் சங்கம் வழக்குரைஞர் வெ.ஜீவகுமார் கூறுகையில், தஞ்சாவூர் - பட்டுக் கோட்டை, தஞ்சாவூர் - அரியலூருக்கு புதிய வழித்தடம் ஏற்படுத்த வேண்டும். மயிலாடுதுறை - திருச்சி வழித்த டத்தில் பயணிகள் ரயில் இயக்க வேண்டும். கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட ரயில் கட்டணத்தை மீண்டும் பழையபடி குறைக்க வேண்டும். திருச்சி - தஞ்சை வழித்தடத்தில் மின்சார ரயிலை கூடுதலாக இயக்க வேண்டும் என்றார்.
கும்பகோணம்
இதேபோல் கும்பகோணம் ரயில் நிலையத்திலும், வியாழனன்று ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ரயில் பயணிகள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில், மயிலாடுதுறை வழியான தஞ்சாவூர் - விழுப்புரம் ரயில் பாதையை இரட்டை வழி பாதையாக மாற்றவும், நீடாமங்கலம் - கும்பகோணம் - விருத்தாச் சலம் இடையே புதிய ரயில் பாதை அமைக்கவும், கும்ப கோணத்தில் முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் அறிவித்தபடி விரைவாக விவேகானந்தர் நினைவு அருங்காட்சியகம் திறக்கவும், கும்பகோணத்தில் ரயில் யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதி அமைக்கவும், கும்பகோ ணம் - தஞ்சாவூர் வழியாக மும்பை, போடிநாயக்கனூர், ஹைதராபாத், பழநி உள்ளிட்ட இடங்களுக்கு நேரடி ரயில் வசதி வேண்டும். பட்டுக்கோட்டை வழியான ரயில் பாதை யில் சென்னைக்கு தினசரி இரவு நேர ரயில் இயக்கவும், பாபநாசம் ரயில் நிலையத்தில் மைசூர், செந்தூர் ரயில்கள் மீண்டும் நின்று செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன.