தஞ்சாவூர், ஆக.5-
தெற்காசிய அளவில் நடைபெற்ற 7 ஆவது சாம்பியன்ஷிப் உறைவாள் சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவிக்கு சனிக்கிழமை சொந்த ஊர் மக்கள் பாராட்டு தெரிவித்த னர்.
தஞ்சாவூர் அருகே சூரக் கோட்டையைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் எஸ்.தர்ஷினி (15). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் உறைவாள் சண்டை விளையாட்டு போட்டியில் கடந்த 8 ஆண்டுகளாக பயிற்சி பெற்று, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற் றுள்ளார்.
இந்நிலையில், நேபா ளம் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் தெற்கு ஆசிய அளவி லான உறைவாள் சண்டை போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா, இலங்கை, நேபாளம், கொரியா, பாகிஸ்தான், ஆப்கா னிஸ்தான் நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங் கேற்றனர். இதில் இந்தியா சார்பில் 18 வயதுக்குட்பட் டோர் பிரிவில் பங்கேற்ற தர்ஷினி முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றார்.
இதையடுத்து, 2023-2024 ஆம் ஆண்டு மலேசிய நாட்டில் நடைபெறவுள்ள ஆசிய அளவிலான போட்டி யில் விளையாட தர்ஷினி தகுதி பெற்றுள்ளார். போட்டி யில் வெற்றி பெற்றவர் களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் முடிந்த நிலையில், கடந்த வாரம் அதற்கான சான்றிதழ்களும், பதக்கங்களும் அனுப்பி வைக்கப்பட்டன.
இதையடுத்து, தெற்கு ஆசிய அளவில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவி தர்ஷினிக்கு சொந்த ஊரான சூரக்கோட்டையில், கிராம மக்கள் சார்பில் சனிக்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட் டது.
விழாவுக்கு வந்தவர் களை தேசிய கபாடி பயிற்று நரும், முன்னாள் தேசிய கபாடி வீரருமான ஜி. குலோத்துங்கன் வரவேற் றார். நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் கலைச் செல்வி பழனிமேகம் தலைமை வகித்தார். தஞ்சா வூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் வைஜெயந்தி கேசவன் மாணவியையும், உறைவாள் சண்டை விளை யாட்டு பயிற்றுநர் ஜெ. செந்தில் குமாரையும் பாராட்டி பொன்னாடை அணிவித்தார்.
கிராம மக்கள் பலரும் மாணவியை பாராட்டினர். இதைத் தொடர்ந்து மாணவி தர்ஷினி 108 தென்னங் கன்றுகளையும், 1,000 பனை விதைகளையும் நட்டு கிராமத்தை பசுமை நிறைந்த கிராமமாக மாற்றும் முயற் சியை தொடங்கி வைத்தார்.