districts

img

விளக்குடியில் குளத்தின் நீர்வழிப்பாதை ,வாய்க்கால் கரை

 திருத்துறைப்பூண்டி, ஆக.29- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி அருகே விளக்குடி வருவாய் கிரா மத்தில் (சர்வே எண் 112,110/2,) அரசுக்கு சொந்தமான சிவன் கோவில் குளம், அய்யனார் பிரடேஸ்வரர் கோவில் குளம் ஆகிய குளத்தின் நீர்வழிப்பாதைகள்   ஆக்கிரமிப்பாளர்களால் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.  வாய்க்கால் கரைமுள்வேலி வைத்து ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. நீர்நிலைகளை மக்கள் மற்றும் கால்நடைகள் முழுமையாக பயன் படுத்த முடியாத  சூழ்நிலை .இதனால் நிலத்தடி நீரும் குறைந்து சுற்றுச்சூழல்  பாதிக்கப்படுகிறது .மேலும் மழைக் காலங்களில் நீர் சேமிக்கப்படாமல் வீணாகி வறண்டே கிடைக்கிறது . உடனடியாக நீர்நிலைகள் மற்றும் நீர் வழி பாதையில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றக்கோரி புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் உடனடியாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தனி கவனம் செலுத்தி நில அளவை  செய்து ஆக்கிரமிப்பை அகற்றி பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.