மயிலாடுதுறை, ஜன.2- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில், கடல் வளத்தை சீரழிக்கும் அர சால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை நிரந்த ரமாக தடைசெய்து மீன் வளத்தையும், மீனவ மக்க ளையும் பாதுகாக்க வேண்டு மென வலியுறுத்தி தரங்கம் பாடி மீனவ பஞ்சாயத்தார் கள் மாவட்ட ஆட்சியர் இரா. லலிதாவிடம் நேரில் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘‘2022 டிசம்பர் 30 அன்று நாகை அக்கரைப்பேட்டை துறை முக வளாகத்தில் நாகை, மயிலாடுதுறை, காரைக் கால், கடலூர் ஆகிய மாவட் டங்களைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்க ளின் பிரதிநிதிகள் பங்கேற்று நிறைவேற்றிய தீர்மான நகலை முகாமில் அளித்து நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி னர். மேலும் மீனவ மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி தொழில் செய்ய ஒரு சில கிராமங்கள் முயற்சித்து வரு கின்றன. இப்பிரச்சனை சம்பந்தமான ஆய்வறிக்கை யை நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்ய உள்ளது. அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை நிரந் தரமாக தடை செய்ய வேண் டும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.