திருச்சிராப்பள்ளி, மே 19-
இந்திய மல்யுத்த வீராங் கனைகளுக்கு பாலியல் கொடுமைகள் செய்த பாஜக நாடாளுமன்ற உறுப்பின ரும், இந்திய மல்யுத்த கூட்ட மைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும், போராட் டம் நடத்துபவர்கள் மீதான அடக்குமுறையை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி சிஐ டியு, தமிழ்நாடு விவசாயி கள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் சார்பில் வியாழ னன்று சிந்தாமணி அண்ணா சாலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் சரஸ்வதி தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலா ளர் ரெங்கராஜன், மாவட்டத் தலைவர் சீனிவாசன், மணி மாறன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சேது பதி, மாவட்டத் தலைவர் லெனின், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மோகன், மாவட்டத் தலை வர் சூர்யா, விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டச் செய லாளர் ராஜேஷ் கண்ணா, மாவட்டத் தலைவர் தங்க துரை, மாதர் சங்க மாவட்டத் தலைவர் பொன்மகள் ஆகி யோர் பேசினர். இதில் ஏராள மானோர் கலந்து கொண்ட னர்.