districts

திருச்சி முக்கிய செய்திகள்

மழை நீருடன் கலந்து கழிவு நீர்  வீடுகளுக்குள் புகுந்தது

அறந்தாங்கி, டிச.14-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிகளில்  கடந்த இரண்டு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் அறந்தாங்கி நகராட்சிக்குட்பட்ட 15 ஆவது வார்டு பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீரும் சாக்கடை நீரும் சூழ்ந்துள்ளது.  குறிப்பாக இப்பகுதியில் சரியான முறையில் வடி கால் வசதி இல்லாததால் சிறிய மழை பெய்தாலும் சாலை யில் நீர் தேங்கி வீட்டிற்குள் செல்லும் நிலை இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பலமுறை  அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை என கூறுகின்றனர்.  சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, இப்பகுதியில் உரிய வடிகால் அமைத்து கொடுக்க  வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

மழைநீர் வடிகால் வாய்க்காலில்  தவறி விழுந்து குழந்தை பலி

தஞ்சாவூர், டிச.14 -  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்தவர் மீன்பிடி தொழிலாளி வினோத் (32), இவரது மனைவி மோனிஷா (27). இவர்களுக்கு ஹரிணி (3), என்ற  பெண் குழந்தையும், தர்னீஸ் என்ற ஒன்றரை வயது ஆண்  குழந்தையும் உள்ளன. இந்நிலையில், சனிக்கிழமை மதியம் சுமார் 12.30 மணி யளவில் மோனிஷா வீட்டின் உள்ளே சமையல் வேலை செய்துக் கொண்டு இருந்தார். அப்போது வீட்டில் விளை யாடிக் கொண்டிருந்த தர்னீஸ், வீட்டை விட்டு வெளியே  சென்றதை மோனிஷா கவனிக்கவில்லை. வீட்டின் முன்பு தேங்கியிருந்த மழைநீரில், தர்னீஸ் தவறி  விழுந்து அருகில் இருந்த வாய்க்காலில் இழுத்து செல்லப் பட்டார். வெகு நேரமாகியும் தர்னீஸ் காணாத நிலையில்,  மோனிஷா உள்ளிட்டோர் தேடியுள்ளனர். அப்போது, வாய்க்காலில் தர்னீஸ் விழுந்து கிடந்ததை கண்டு வினோத், மோனிஷா மற்றும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி யடைந்து, குழந்தையை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம்  பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்து வர்கள் ஏற்கனவே தர்னீஸ் இறந்து விட்டதாக தெரிவித்த னர்.  தகவலறிந்த பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் மருத்துவமனைக்கு சென்று பெற்றோ ருக்கு ஆறுதல் கூறினார். இச்சம்பவம் தொடர்பாக சேது பாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் துரைராஜ் மற்றும்  காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒன்றிய அரசு உரிய பங்கினைத் தந்திருந்தால் புதுக்கோட்டைக்கு ரூ.1,900 கோடியில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் வந்திருக்கும் எம்.சின்னதுரை எம்எல்ஏவின் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

புதுக்கோட்டை, டிச.14 - ஒன்றிய அரசு உரிய பங்கினைத் தந்திருந்தால் புதுக்கோட்டை மாவட்டத் திற்கு 1,900 கோடி ரூபாய் செலவில்  புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் வந்தி ருக்கும் என்று சட்டப் பேரவையில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்து முடிந்துள்ள கூட்டத்தொடரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை எழுப்பிய கேள்வியும், அதற்கு நகர்ப்புற  வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அளித்த பதில் விபரம் பின்வரு மாறு: எம்.சின்னதுரை எம்எல்ஏ பேசுகை யில், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை தொகுதிக்குட்பட்ட கீரனூர்  பேரூராட்சியில் 15 தினங்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வழங்கப்படுகிறது. பழைய குடிநீர்க் குழாய்கள் சீர் செய்யப்படாமல் இருப்பதால் தினசரி தண்ணீர் கிடைப்பதில் மிகவும் சிரமம்  ஏற்படுகிறது. ஆகவே, புதிய குடிநீர்க்  குழாய்கள் அமைத்து, பாதுகாக்கப் பட்ட குடிநீர் தினசரி கிடைப்பதற்கும், கறம்பக்குடி, கந்தர்வகோட்டை பகுதி களில் காவிரி கூட்டுக் குடிநீர் கிடைப் பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.  இதற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளிக்கையில், விராலிமலை வழி யாக வரும் தண்ணீர் வழியோர கிரா மங்களுக்குத் தந்து, பிறகு புதுக் கோட்டையில் 17 எம்எல்டி குடிநீர் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் குழாய்கள் பழுதுபட்டிருப்பதால் தண்ணீர் சரியாகச் செல்லவில்லை. பின்னர் அரசு நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்பொ ழுது தண்ணீர் சென்று கொண்டிருக் கிறது. அது மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த புதுக்கோட்டை மாவட்டத்திற் கும் 1,900 கோடி ரூபாய் செலவில்  புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கான  விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப் பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஒன்றிய அரசு ஜல்  ஜீவன் திட்டத்தை 2024 ஆம் ஆண்டு டன் முடித்துக் கொண்டதால், ஒன்றிய அரசு நிதியுதவி தர இயலாது எனச் சொல்லிவிட்டது. ஜல் ஜீவன் திட்டத்தை நீட்டித்துத் தரு வதற்கு முதலமைச்சரின் கடிதம் பெற்று  ஒன்றிய ஜல் ஜீவன் துறை அமைச் சரை சந்தித்தபோது 2027-ஆம் ஆண்டு 8-ஆம் மாதம் வரை நீட்டித்துத் தருவ தாக உறுதியளித்துள்ளார். அப்போது மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் உரிய  பங்கினை ஒன்றிய அரசு தர வேண் டும். அந்த நிதி ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்பட்டது. இல்லையென்றால் ஒட்டு மொத்த புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மான புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கும். இந்த அரசு அதற்கான முயற்சியை தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கிறது. கந்தர்வகோட்டை பகுதியிலும் ஏற்கனவே உள்ள குழாய்கள் பழுது பட்டிருக்குமானால், அவற்றை உடனடி யாக சரி செய்வதற்கான அனைத்து நட வடிக்கைகளும் எடுக்கப்படும்.  இவ்வாறு அமைச்சர் நேரு பதி லளித்தார்.

பள்ளி வேனில் சிக்கி  2 வயது குழந்தை பலி

பெரம்பலூர், டிச.14 - பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற் குட்பட்ட பசும்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிங்கார வேல் - சந்தியா தம்பதியினர். இவர்களுக்கு 7 வயதில்  விசித்ரா, 5 வயதில் ருத்ரவேல், 2 வயதில் சண்முகவேல் என  3 குழந்தைகள் உள்ளனர். விசித்ரா மற்றும் ருத்ரவேலும் வி.களத்தூரில் உள்ள  தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். சனிக்கிழமை சந்தியா தனது 3 குழந்தைகளுடன் விசித்ரா மற்றும் ருத்ர வேலை பள்ளி வேனில் ஏற்றி விடுவதற்காக சென்று உள்ளார். அப்போது விசித்ரா மற்றும் ருத்ரவேலும் வேனில்  ஏறிவிட்ட நிலையில் அவர்களுக்கு டாட்டா காட்டுவதற் காக சிறுவன் சண்முகவேல் வேனிற்கு அருகில் சென்ற தாக கூறப்படுகிறது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக வேனிற்கு அடியில் சிக்கிய சிறுவன் சண்முகவேல் படுகா யமடைந்தார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட சந்தியா மற்றும் அருகிலிருந்தவர்கள் குழந்தையை மீட்டு  பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

காப்புக்காட்டில் செல்ல வழிமறிப்பு சொக்கநாதபட்டி மக்களை தடுக்கும் வனத்துறையினர்

பொன்னமராவதி, டிச.14 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே  சொக்கநாதபட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிரா மத்தைச் சுற்றி சுமார் 326 ஏக்கர் வனத்துறைக்கு சொந்த மான காப்புக் காடு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த  காப்புக்காட்டின் வழியாகத் தான் விவசாயிகள் தங்களது  நிலங்கள் மற்றும் குளம், கோவில் உள்ளிட்டவற்றிற்கு செல்ல வேண்டியுள்ளது.  வனத் துறையினர், காப்பு காட்டில் நபார்டு வங்கி நிதி  உதவியுடன் வேம்பு, புங்கன், நாவல், ஆவி உள்ளிட்ட  மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளதால் காப்புக் காட்டின் வழியாக செல்லக் கூடாது என்று கூறி பொது மக்களை தடுக்கின்றனர்.  சாலை மறியல் மேலும், பொதுமக்கள் வைத்திருக்கும் செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து, ஆயிரக் கணக்கான ரூபாய் அபராதம் விதிப்பதாகவும், மேலும்  தங்கள் ஆடு மாடுகளை காப்பு காட்டில் மேய்வதை தடுப்பதாகவும் கூறி பொன்னமராவதி -திருச்சி நெடுஞ்சா லையில் உள்ள அம்மன்குறிச்சியில் சொக்கநாதபட்டி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை யினர் மற்றும் வனத்துறையினர், வருவாய்த் துறையினர் கிராம மக்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என  உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். 

வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது

அறந்தாங்கி, டிச.14 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்.என்.புரம் 21 ஆவது வார்டு நகராட்சி அரசு நடுநிலைப் பள்ளி  பின்புறம் வசிக்கும் முத்துலட்சுமி என்பவர் வீடு, தொடர் மழையால் இடிந்து விழுந்தது. இவர்கள் வேறு இடத்திற்கு சென்றதால் உயிர் சேதம் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறையினர் இடிந்த  வீட்டை பார்வையிட்டு அந்த குடும்பத்திற்கு உரிய நிவா ரண நிதி அரசிடம் இருந்து பெற்று தருவதாக உறுதி யளித்தனர். அவர்களுக்கு போதிய வாழ்வாதாரம் இல்லாததால், அரசு விரைந்து போர்க்கால அடிப்படை யில் உரிய நிவாரணம் நிதி வழங்குமாறு அப்பகுதி மக்கள்  தெரிவித்தனர்.

சிபிஎம் போராட்டம் வெற்றி கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு செய்தவர்கள் மீது  நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் ஒப்புதல்

புதுக்கோட்டை, டிச.14 - புதுக்கோட்டை மாவட்டம் வெண்ணாவல்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு  செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி கள் உறுதியளித்துள்ளனர். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். வெண்ணாவல்குடி தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய விவசாயக்  கடன், நகைக்கடன், சிறுதொழில் கடன், கால்நடைக் கடன்  ஆகியவற்றில் கையாடல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் டிச.10 அன்று வெண்ணாவல்குடி கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆலங்குடி வட்டாட்சியர் பெரிய நாயகி தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடை பெற்றது. பேச்சுவார்த்தையில் தனி வட்டாட்சியர் ராமசாமி,  கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், சு.மதியழகன், ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல், நகரச்  செயலாளர் ஏ.ஆர்.பாலசுப்பிரமணியன் மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்ற னர். பேச்சவார்த்தையில், தவறுக்குப் பொறுப்பான சங்கத்தின் முன்னாள் செயலாளர் உள்ளிட்ட பணியா ளர்கள் மீது உரிய காலத்திற்குள் துறை ரீதியான நடவ டிக்கை எடுப்பது எனவும், கூட்டுறவு சார் பதிவாளர் மற்றும்  முதுநிலை ஆய்வாளர் கொண்ட குழு ஒரு வார காலத்திற்குள்  விசாரணை மேற்கொள்வது எனவும் எழுத்துப் பூர்வமாக அதி காரிகள் உறுதியளித்தனர். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.