தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஏழு முனை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் துவங்கிய பிரச்சாரம், கீழ்வேளூர் பகுதியை வந்தடைந்த போது கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி பிரச்சாரத்தை வாழ்த்திப் பேசினார். இயக்கத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் நாகை மாவட்ட செயலாளர் அ.தி.அன்பழகன், மாவட்ட தலைவர் பா.ராணி, மாவட்ட பொருளாளர் அந்துவன் சேரல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.