திருவாரூர், நவ.3- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம், திரு மிச்சூர் கிராமம், கட்டளை தெருவைச் சேர்ந்த மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரும், தியாகி ஜெ. நாவலன் மைத்துனருமான மூத்த தோழர் கே.கலியபெரு மாள் படத்திறப்பு விழா அவரது இல்லத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி மூத்த தோழர் கலியபெருமாள் படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். ஒன்றிய செய லாளர் கே.எம்.லிங்கம், ஒன்றியக்குழு உறுப்பினர் கள் உள்பட பலர் கலந்து கொண்டு செவ்வணக்கம் செலுத்தினர்.