districts

img

தஞ்சை, கரூரிலிருந்து தென் மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு

தஞ்சாவூர்/கரூர், டிச.20 - தஞ்சாவூரிலிருந்து திருநெல்வேலி உள்ளிட்ட  தென் மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருள்கள் செவ்வாயன்று அனுப்பி வைக்கப்பட்டன. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்ததால், வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு உதவி செய்வதற்காக தஞ்சாவூர் மாவட் டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரணப் பொருள்கள் திரட்டப்பட்டன. இதில், தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள அரிசி மூட்டை கள், பால் பவுடர்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள், குடி நீர் பாட்டில்கள், மளிகை பொருள்கள், போர்வை கள், சமையல் எண்ணெய்கள், மெழுகுவர்த்தி கள், நாப்கின்கள் ஆகியவை மேயர் சண். ராமநா தன், ஆணையர் ஆர்.மகேஸ்வரி, துணை மேயர்  அஞ்சுகம் பூபதி ஆகியோர் தலைமையில் மாவட்ட  ஆட்சியரகத்தில் செவ்வாயன்று ஒப்படைக்கப் பட்டன. இதேபோல, திருவையாறு அருகே வடுகக் குடியைச் சேர்ந்த வாழை விவசாயி எம்.  மதியழகன் ஏறத்தாழ 20 ஆயிரம் எண்ணிக்கை யில் 2 டன் வாழைப் பழங்களை மாவட்ட ஆட்சிய ரகத்தில் ஒப்படைத்தார். மாவட்ட நிர்வாகத்துக்கு  செவ்வாய்க்கிழமை மாலை வரை ஏறத்தாழ ரூ.10  லட்சம் அளவுக்கு நிவாரணப் பொருள்கள் வந்தன. இவற்றில் முதல் கட்டமாக ரூ. 2.50 லட்சம்  மதிப்புள்ள நிவாரணப் பொருள்கள் ஏற்றப்பட்ட லாரியை மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாக ராஜன் அனுப்பி வைத்தார். சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பெருந்தலை வர் மு.கி.முத்துமாணிக்கம் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள், அனைத்து நிலை அரசு  ஊழியர்கள் ஒன்றிணைந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு முதல் கட்டமாக, அரிசி, மளிகை, ஜவுளி, தண்ணீர், பிஸ்கட் உள்ளிட்ட ரூ.2,28,400 மதிப்புள்ள நிவா ரணப் பொருட்களை அனுப்பி வைத்தனர்.  பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து, அரிசி, கோதுமை, சேமியா, மளிகைப் பொருட்கள், ஜீனி, போர்வை உள்ளிட்ட ரூ.1,51, 389 மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி  வைக்கப்பட்டன. இதற்கு பேராவூரணி சட்டப் பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். வட்டாட்சியர் (பொ) சாந்தகுமார், குமரப்பா  பள்ளி பொருளாளர் அஸ்வின் கணபதி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். கரூர் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு கரூர் மாநகராட்சி சார்பில் ரூ.21 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப் பட்டன. கரூர் மாநகராட்சி சார்பில் மாமன்ற உறுப்பி னர்களின் ஒரு மாத சம்பளம், மாநகராட்சி ஊழி யர்களின் ஒரு நாள் சம்பளம் ஆகியவற்றை சேர்த்து ரூ.21 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவா ரணப் பொருட்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு, மாநகராட்சி மேயர் கவிதா தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டன. அதில், தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் பாக் கெட், போர்வைகள், பாய், சப்பாத்தி, நாப்கின் கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சேகரிக்கப் பட்டு, இரண்டு கண்டெய்னர் லாரிகளில் அனுப்பி  வைக்கப்பட்டன. மாநகராட்சி ஆணையர் சுதா  மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.