மயிலாடுதுறை, ஜூலை 26 -
மயிலாடுதுறை மாவட்டம் எலந்தகுடியைச் சேர்ந்தவர் போஸ் என்கிற காதர். இவர் மலேசிய நாட்டில் உணவகம் நடத்தி வருகிறார். மேலும், மலேசிய நாட்டுக்கு இந்தியாவி லிருந்து தொழிலாளர்களை அனுப்பும் வேலையையும் செய்து வருகிறார்.
இந்நிலையில், காதர் ஏற்பாட்டில் மலேசியாவுக்கு சென்ற திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா முடி கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த பஷீர் அகமது என்ற 25 வயது இளைஞர் சில மாதங்களிலேயே உடல் நலக்குறைவு ஏற்பட்டு தாயகம் திரும்பினார். பிறகு சென்னையில் சிகிச்சை யில் இருந்த அவர் (பஷீர் அகமது) ஒரு வாரத்தில் உயிரி ழந்தார். இதனை காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆனால், பஷீர் அகமதுவின் உடற்கூராய்வு அறிக்கையில் அவருக்கு கழுத்தில் ஊசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது என குடும்பத்தினர் கூறுகின்றனர். பஷீர் அகமது மரணத்திற்கு நீதி கேட்டும், வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்ற காதர் மீது கொலை வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், கடந்த ஜூலை 7 அன்று மயிலாடுதுறை சின்னக்கடை தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, உயிரிழந்த பஷீர் அகமதுவின் பெற்றோர், செவ்வா யன்று குடும்பத்துடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போராட் டம் குறித்து அறிந்த மாவட்ட வழங்கல் அலுவலர் அம்பிகா பதி, மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் ஆகி யோர் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.