சமாதானம் செய்யச் சென்ற 2 பேருக்கு அரிவாள் வெட்டு
தஞ்சாவூர், அக்.14 - தஞ்சாவூரில் தக ராறை சமாதானப் படுத்தச் சென்ற திமுக வைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் உள்பட 2 பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர். தஞ்சாவூர் வடக்கு வாசல் ஏ.ஒய்.ஏ. நாடார் சாலையைச் சேர்ந்தவர் எஸ்.விஜய்பாபு (42). திமுகவைச் சேர்ந்த இவர் 7 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினராக உள்ளார். அப்பகுதியில் ஞாயி றன்று மாலை இரு தரப்பி னருக்கும் இடையே தக ராறு ஏற்பட்டது. இதை சமாதான ப்படுத்துவ தற்காக விஜய்பாபு சென்றார். அப்போது விஜய் பாபு, அவருடன் இருந்த காந்தி என்ற மணிகண்டன் அரிவாளால் வெட்டப்பட் டனர். காயமடைந்த 2 பேரும் தஞ்சாவூர் மருத்து வக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இது குறித்து மேற்கு காவல் நிலையத்தினர் விசா ரணை மேற்கொண்டுள்ள னர்.
மழைநீர் சேகரிப்பு குளம் வெட்டும் பணி
அறந்தாங்கி, அக்.14 - அறந்தாங்கி பாலி டெக்னிக் கல்லூரியின் வளர்ச்சிக்கு உறுதுணை யாக இருந்து வரும் முன்னாள் அமைப்பியல் துறை 1999-2001 மாண வர்கள் சார்பாக கல்லூரி வளாகத்தில் இரண்டு மழைநீர் சேகரிப்பு குளங் கள் வெட்டும் பணி திங்களன்று தொடங்கி யது. இந்தியா முழுவதும் நீர்நிலைகளை தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வந்து கொண்டி ருக்கும் கைபா, அதன் நிர்வாகிகள் மரம் தங்க கண்ணன் இந்த பணி யினை செய்ய தாமாக முன் வந்தனர். அறந் தாங்கி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் மழைநீர் சேகரிப்பிற்கு, இரண்டு குளங்கள் வெட்ட முன்வந்த கைபா நிர்வாகிகளுக்கு, கல்லூரி முதல்வர் ச. குமார் நன்றி தெரி வித்தார்.
இலவச தோல் நோய் மருத்துவ முகாம்
அறந்தாங்கி, அக்.14 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு சார்பில் இலவச தோல் நோய் மருத்துவ முகாம் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் மருத்துவர் ச.தட்சிணாமூர்த்தி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தார். பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போரை நிறுத்த வலியுறுத்தி, அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு சார்பில் நடைபெற்ற இலவச தோல் சிகிச்சை மருத்துவ முகாமை கராத்தே கண்ணையன் துவக்கி வைத்தார். மருத்துவர் ச.தெட்சிணாமூர்த்தி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தார். இதில் 150 பேர் சிகிச்சை பெற்றனர். முகாமில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன். மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலச் செயலாளர் முனைவர் முபாரக் அலி, ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் மாவட்டத் தலைவர் ரியாஸ் அகமது, தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் அப்துல் பாரி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு
தஞ்சாவூர், அக்.14- தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணி அருகே உள்ள சித்துக்காடு வடக்கு கிராமத்தின் வழியாக செல்லும் பொதுப் பணித்துறை கிளை வாய்க்காலில் அமைந் துள்ள ஆற்றுப் பாலத்தின் அடியில், சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் அழுகிய நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த திருச்சிற்றம்பலம் மேற்கு கிராம நிர்வாக அலுவலர் ஞானசந்தி ரன், திருச்சிற்றம்பலம் காவல்நி லையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்ட பின், பேராவூரணி தீயணைப்பு மீட்பு துறையினர் வந்து, இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டனர். திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிச.2,3,4 தேதிகளில் சிபிஎம் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு
புதுக்கோட்டை, அக்.14 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட 24 ஆவது மாநாடு கீரனூரில் டிசம்பர் 2,3,4 தேதி களில் நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட 24 ஆவது மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் கீரனூரில் ஞாயிறன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் குன்றாண்டார்கோவில் ஒன்றியச் செயலாளர் எஸ்.கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர்கள் பேசினர். மாநாட்டு வரவேற்புக் குழு தலைவராக எம்.சின்னதுரை எம்எல்ஏ., செயலாளராக எஸ்.கலைச்செல்வன், பொருளாள ராக எஸ்.பெருமாள் உட்பட 101 பேர் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. டிச.2 அன்று பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மாவட்ட மாநாட்டுப் பேரணி-பொதுக்கூட்டம் நடைபெறும், என்றும், பிரதிநிதிகள் மாநாடு டிச.3,4 தேதிகளில் நடைபெறும் எனவும், இந்த மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்பர் எனவும் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தெரிவித்துள்ளார்.
அக்.23 சென்னையில் தர்ணா கும்பகோணத்திலிருந்து 200 பேர் பங்கேற்க மாற்றுத்திறனாளிகள் முடிவு
கும்பகோணம், அக்.14 - மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படுகிற மாதாந்திர உதவியை, அண்டை மாநிலம் போல் சாதாரண மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.6,000, கடுமையாக பாதிப்புடைய வர்களுக்கு ரூ.10,000, படுத்த படுக்கையாக உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.15,000 என தமிழகத்திலும் உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அக். 23 அன்று மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெறுகிறது. அதையொட்டி கும்பகோணம் கோட்ட அளவில், கும்பகோ ணம் மாநகரம், கும்பகோணம் ஒன்றியம், பாபநாசம் ஒன்றியம், திருப்பனந்தாள் ஒன்றியம், திருவிடைமருதூர் வடக்கு தெற்கு ஒன்றியம் ஆகியவற்றில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னணி ஊழியர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கும்பகோணம் மாற்றுத்திறனாளிகள் சங்க அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட இணைச் செயலாளர் ஜி.சரவ ணன் தலைமை வகித்தார். அதில், அக்.23 அன்று சென்னை யில் நடைபெறவுள்ள தர்ணா போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பது என முடிவானது. ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட துணைத் தலைவர் பழ.அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தாம்பரம் - இராமநாதபுரம் சிறப்பு ரயிலை தினசரி ரயிலாக இயக்க கோரிக்கை
தஞ்சாவூர், அக்.14 - தாம்பரம் - இராமநாதபுரம் சிறப்பு ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் வ.விவேகானந்தம், செயலாளர் கே.தமிழ்செல்வன், பொருளாளர் கே.வைத்தியநாதன் மற்றும் நிர்வாகிகள், தெற்கு ரயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் உள்ளிட்ட ரயில்வே உயர் அலுவலர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். அம்மனுவில், “திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் பாதையில் சென்னைக்கான தினசரி இரவுநேர விரைவு ரயில் இன்னும் இயக்கப்படவில்லை. மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், ரயில் பயணிகள் சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள், சென்னைக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். தற்போது மயிலாடுதுறை - பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் பாதையில் தாம்பரத்தில் இருந்து இராமநாதபுரம் வரை 06103/04 தாம்பரம்-இராமநாதபுரம் சிறப்பு ரயில் வாரத்தில் மும்முறை இயங்கி வருகிறது. மேலும் இந்த ரயில், இந்த தடத்தில் உள்ள அனைத்து முக்கிய நிறுத்தங்களிலும் நின்று செல்வது பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிற. இந்த ரயிலை 16159/60 தாம்பரம் - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலுடன், ரயில் பெட்டி பகிர்ந்தளிப்பு முறை (ஆர்.எஸ்.ஏ) செய்து தினசரி சிறப்பு ரயிலாக இயக்க வேண்டும். மேலும், திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் பாதையில், ஏற்கனவே இயக்கப்பட்டு வருகிற, அகல ரயில் பாதை பணிகள் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த, தினசரி இரவுநேர விரைவு ரயிலான கம்பன் விரைவு ரயில் எப்போது இயக்கப்படும் என இப்பகுதி ரயில் பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கம்பன் விரைவு ரயில் இயக்கப்படும் வரை தாம்பரம் - இராமநாதபுரம் சிறப்பு விரைவு ரயிலை ரயில் பெட்டிகள் பகிர்ந்தளிப்பு முறையில், தினசரி இயக்கினால் சென்னைக்கு தினசரி ரயில் வசதி இல்லாமல் இருக்கும் திருநெல்லிக்காவல், திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி பயணிகள் தடையின்றி சென்னைக்கு பயணிக்க இயலும். எனவே இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பணியில் இருந்த இரு காவலர்கள் பணி இடைநீக்கம்
புதுக்கோட்டை, அக்.14 - விசாரணை கைதி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், பாதுகாப்புப் பணியில் இருந்த இரு ஆயுதப் படைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு நடுக்காவிரி மேலத்தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (46). வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரால், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த ஆக.28 முதல் புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். வலிப்பு நோய் காரணமாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இவர் கடந்த அக்.5 அன்று அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இவர் அனு மதிக்கப்பட்டிருந்த அவசர சிகிச்சைப் பிரிவில், பூச்சி மருந்து குடித்து சிகிச்சைக்கு சேர்ந்திருந்த வேறொரு வரிடமிருந்து கைப்பற்றப்பட்ட புட்டின் என்ற பூச்சி மருந்து அங்கே வைக்கப்பட்டிருந்ததாம். இந்த மருந்தை விசாரணைக் கைதி ரமேஷ் வெள்ளிக்கிழமை எடுத்துக் குடித் துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மருத்துவர்கள், அவ ருக்கு பூச்சி மருந்து குடித்ததற்கான சிகிச்சையை அளித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி கடந்த சனிக் கிழமை ரமேஷ் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் அலட்சிய மாக இருந்ததாகக் கூறி, ஆயுதப்படைக் காவலர்கள் நவநீதகிருஷ்ணன், வல்லரசு ஆகிய இருவரையும் பணி இடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஞாயிறன்று உத்தரவிட்டார்.