districts

அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை

தஞ்சாவூர், ஜூன் 2-  

    அரசு பள்ளிகளில் மாண வர்களிடம் ஆசிரியர்கள் எதுவும் தனியாக கட்டணம்  வசூல் செய்தால் சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை  எடுக்கப்படும் என பள்ளிக்  கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தெரிவித்தார்.

     இதுகுறித்து தஞ்சாவூ ரில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறு கையில், ‘‘ஆசிரியர்கள், இந்தாண்டை விட, வரும் ஆண்டில் கூடுதலாக மாண வர்களின் தேர்ச்சி விகி தத்தை அதிகரிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஜூன் 7 அன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.  

   அதற்கு முன்னதாகவே பள்ளி மற்றும் வகுப்பறை களை சுத்தப்படுத்துதல், வளாகத்தில் புதர்களை அகற்றுதல், தண்ணீர் மற்றும்  கழிவறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற் பாடு பணிகள் நடந்து வரு கின்றன. இதை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி  அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    தனியார் பள்ளி வாகனங் களின் செயல்பாடுகள் குறித்து, அந்தந்த மாவட்டங் களில் ஆய்வு செய்யப்பட்டுள் ளது. அரசுப் பள்ளிகளில், இந்தாண்டுக்கான கடந்த மே மாதத்தில் மட்டும் 80  ஆயிரத்துக்கும் மேற்பட்ட  மாணவர்கள் சேர்ந்துள்ள னர். பள்ளிகள் திறக்கப்பட்ட  பிறகு எத்தனை மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்கிற முழு  விவரம் தெரியவரும்.

    முதல்வரின் வானவில் மன்றம், புதுமைப்பெண் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களால் அரசு பள்ளி களில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந்த  2 ஆண்டுகளில் 11 லட்சம்  மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 2,381 பள்ளிகளில் இது வரை 40 ஆயிரம் மாணவர் கள் எல்கேஜி., யுகேஜியில் சேர்ந்துள்ளனர். குடோனில் இருந்து புத்தகங்கள் பள்ளி களுக்கு அனுப்பப்படு கின்றன. சில இடங்களில் ஆசிரியர்கள் தங்களின் விருப் பத்தின் பேரில், குடோனில் இருந்த புத்தங்களை எடுத்து  செல்லுகின்றனர்.  

    ஆசிரியர்களின் கோரிக் கைகள் நிதி நிலைமைக்கு தகுந்தாற்போல் படிப்படி யாக நிறைவேற்றப்படும். அரசுப்பள்ளியில் கம்ப்யூட் டர் சயின்ஸ் வகுப்புக்கு ஏற்கனவே 200 ரூபாய் வசூல்  செய்யப்பட்டது. தற்போது அந்த தொகையும் வசூல் செய்ய வேண்டாம் என அறி வுறுத்தப்பட்டுள்ளது. இதற் காக மூன்று கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடம் ஆசிரியர் கள் எதுவும் தனியாக கட்ட ணம் வசூல் செய்தால் சம்பந் தப்பட்டவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கப்படும்’’ என் றார்.