மயிலாடுதுறை, அக்.1 - இந்திய மருத்துவக் கழக மயிலாடு துறை கிளை, தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவ மனை இணைந்து உலக இதய தினத்தை முன்னிட்டு “இதயம் காக்க” விழிப்புணர்வு நடைப்பயண பேரணி சாய் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்திய மருத்துவக் கழக மயிலாடு துறை கிளை தலைவர் மருத்துவர் பாரதி தாசன் கொடியசைத்து நடைப்பயண பேர ணியை தொடங்கி வைத்தார். இதில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், இத யத்தை பாதுகாப்பது தொடர்பாக விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழிப்புணர்வு நடைபயண பேரணியில் மயிலாடுதுறை சேம்பர் ஆப் காமர்ஸ் தலை வர் செல்வம், சாய் வாக்கர்ஸ் கிளப் தலைவர் ராமகிருஷ்ணன், பீக்காக் வாக்கர்ஸ் கிளப் தலைவர் குழந்தைவேலு, தடகள சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், நகராட்சி தன்னார்வ பயிலக முதன்மை ஒருங்கிணைப் பாளர் சிவராமன், திருக்குறள் பேரவை நிர்வாகி முத்துச்செல்வன், லயன்ஸ் மண்டல தலைவர் தட்சிணாமூர்த்தி மற்றும் மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட னர். இப்பயணத்தில் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி மாணவர்கள், இந்திய இளைஞர்கள் வாழ்வியல் அறக்கட்டளையி னர், நகராட்சி தன்னார்வ பயிலக மைய மாண வர்கள், சாய் வாக்கர்ஸ் கிளப் உறுப்பி னர்கள், பீக்காக் வாக்கர்ஸ் கிளப் உறுப்பி னர்கள், சிசிசி சமுதாய கல்லூரி மாணவிகள், சேம்பர் ஆப் காமர்ஸ் உறுப்பினர்கள், உணவு உற்பத்தியாளர் சங்கத்தினர், ரோட்டரி சங்கத்தினர், லயன்ஸ் சங்கத்தினர், அறம் செய் அறக்கட்டளையினர், ஜெயின் சங்கத் தினர், என்.சி.எப்.டி பேஷன் பியூட்டிசியன் பயிற்சி மைய மாணவிகள் மற்றும் பொது மக்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை ஊடகவியலாளர் அகஸ்டின் விஜய் தொகுத்து வழங்கினார். இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளை செயலாளர் மருத்துவர் சௌமித்யா பானு நன்றி கூறினார்.