பெரம்பலூர், ஜூன் 5-
பெரம்பலூர் அருகே உள்ள அரணாரையைச் சேர்ந்த வர் தமிழ் செல்வராஜ் (எ) அப்துல்ரஹ்மான் (45). இவர் சினிமா படங்களை இயக்கி உள்ளார். அதோடு, பல குறும் படங்கள் எடுத்து விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும், இவர் மீது, பெரம்பலூர் காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுலையில் உள்ளதோடு, பிரபல ரவுடி லிஸ்டிலும் பெயர் உள்ளது.
இவர் திங்களன்று பெரம்பலூர் நீதிமன்றத்தில் வாய்தா விற்காக வந்துவிட்டு தனது திருமணம் மற்றும் பிறந்த நாளை கொண்டாட, தனது நண்பர்களுடன் பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் பாரில் மது அருந்திக் கொண்டு இருந்தார்.
அப்போது, அங்கு முகமூடி அணிந்து வீச்சரிவாளு டன் வந்த 3 மர்ம நபர்கள் அவரை சராமரியாக வெட்டிக் கொன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற பெரம்பலூர் காவல்துறை யினர் ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்தும், விசாரணை நடத்தி வருகின்றனர்.