districts

img

திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை

புதுக்கோட்டை, ஜன.15 - திருவள்ளுவர் தினத் தையொட்டி, புதுக்கோட் டையில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பில் புதன்கிழமை மாலை அணிவித்து மரி யாதை செய்யப்பட்டது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் மாலை  அணிவித்து மரியாதை செய்தார். இந்நிகழ்வில் கட்சியின் மாவட்டச் செயற்குழு  உறுப்பினர்கள் சு.மதியழகன், டி.சலோமி, மாநகரச் செயலாளர் புதுகை எஸ்.பாண்டி யன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பாண்டி செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெரம்பலூர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலை யத்தில் தமிழ்ச் சங்கம் சார்பில் சங்க மாவட்டத் தலைவர் வை.தேனரசன் தலை மையில்‌, செயலாளர் இரா.சீனிவாச ராவ்  முன்னிலையில் திருவள்ளுவர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் அமைந்துள்ள திருவள்ளு வர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தப்பட்டது. இதில் தமிழறிஞர் வைகை மாலா எழுதிய “தமிழ் மொழியில் கல்வி” என்ற நூலை வெளியீட்டு சிறப்புரை ஆற்றி னார். நிகழ்ச்சியில், தி.க. மாவட்டத் தலைவர் தங்கராசு, மாவட்ட பொறுப்பாளர் அக்ரி  ஆறுமுகம், தலைமை ஆசிரியர் மாய கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம் நாகை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில், நாகப்பட்டினம் தம்பிதுரை பூங்கா வில் உள்ள மறைமலை அடிகள் வளா கத்தில் திருவள்ளுவர் தினம் கொண்டா டப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்ட திமுக செயலா ளர் என்.கவுதமன் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில், மாநில பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் இல.மேக நாதன், நாகை நகர் மன்றத் தலைவர் இரா. மாரிமுத்து, நகர்மன்ற துணைத் தலைவர் எம்.ஆர்.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் மு.க.ஜீவா வர வேற்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கவிஞர் ஆவராணி ஆனந்தன் வாழ்த்துரை வழங்கினார். திராவிடர் கழகத் நாகை நகரத் தலைவர் தெ.செந்தில்குமார் நன்றி கூறினார்.