districts

img

கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு

அரியலூர், ஜூன்.8- கடலூர் மாவட்டம்  வானமாதேவி மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவரது மனைவி செல்வி (வயது 80). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர், ஊர் ஊராக சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த  கொடப்பேரி அருகே நடுக்காட்டில் உள்ள தண்ணீர் இல்லா கிணற்றில் மூதாட்டி தவறி விழுந்து,அலறினார்.  108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும்  பொது மக்களின் உதவியுடன்  மூதாட்டியை  பத்திரமாக மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்.பின்னர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  மூதாட்டிக்கு கையில் லேசாக முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.