districts

img

12 மணி நேர வேலை சட்டத்தை திரும்பப் பெறுக

சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஏப்.22-

    தமிழ்நாட்டில் திமுக அரசு கொண்டுவந்துள்ள 12 மணி நேர வேலை சட்டத்தை  திரும்பப் பெற கோரி தமி ழகம் முழுவதும் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    இதனொரு பகுதியாக  தஞ்சை ரயிலடி முன்பு  மாவட்டச் செயலாளர் சி. ஜெயபால் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். கோதண்டபாணி, ஓய்வூதி யர் சங்கங்களின் ஒருங்கி ணைப்பாளர் என்.குரு சாமி, சிஐடியு விரைவு போக்குவரத்து சங்க மாநில துணைச் செயலாளர் பி. வெங்கடேசன், சிபிஎம் மாந கரச் செயலாளர் என்.வடிவே லன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே. அன்பு, முறைசாரா சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர் நீதி ஆழ்வார், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் இ.டி.எஸ்.மூர்த்தி, சுமைப் பணி சங்க மாவட்டச் செயலாளர் முருகேசன், மாவட்ட துணை செயலாளர் சாய் சித்ரா, அரசு போக்குவரத்து சிஐடியு  சங்க பொருளாளர் எஸ்.ராம சாமி, டாஸ்மாக் சங்க மாவட்டத் தலைவர் கே.மதி யழகன், டிஆர்இயூ சங்கத் தலைவர் ரஜினி, தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதி நிதிகள் சங்க செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 புதுக்கோட்டை  

   புதுக்கோட்டை சின் னப்பா பூங்கா அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா தலைமை வகித்தார். மாநில செயலாளர்கள் ஏ.ஸ்ரீதர், எஸ்.தேவமணி ஆகியோர் கண்டண உரையாற்றினர். சி.மாரிக்கண்ணு, கே. ரெத்தினவேல், ரேவதி, சித்தையைன், சரவணன், செல்வி, மாணிக்கம், முருக தாஸ் உள்ளிட்டோர் விளக்கிப் பேசினர். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப் பினர் ஜி.நாகராஜன், நகரச்  செயலாளர் ஆர்.சோலை யப்பன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.