districts

img

அரசாணை எண் 152ஐ ரத்து செய்யக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, நவ.23- மாநகராட்சிகளில் பணி புரியும் தூய்மை பணியா ளர்கள், ஓட்டுநர்கள், மேற்  பார்வையாளர்கள் போன்ற  இதர பணிகளை தனியார் நிறு வனங்களுக்கு ஒப்பந்தம் விடும் அரசாணை எண் 152ஐ ரத்து செய்யக் கோரி திருச்சி,  திருவாரூர், கரூர் மாவட்டங்  களில் சிஐடியு சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட மையம் மற்றும் திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்கம் சார்  பில் செவ்வாயன்று திருச்சி  மாநகராட்சி அலுவலகம்  முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் இளைய ராஜா தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், ஸ்ரீரங்கம் பொறுப்பாளர்  ரகுபதி, சங்க மாவட்டச் செய லாளர் மாறன், சங்க பொறுப்  பாளர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்டத் தலைவர் கே.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர், டி.முருகை யன், மாநிலத் துணைத் தலை வர் எஸ்.காமராஜ், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஏ.பி.டி. லோகநாயகி, டி.கலிய மூர்த்தி, கே.ஆறுமுகம் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
கரூர்
கரூர் மாநகராட்சி அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவா னந்தம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி.முரு கேசன், மாவட்டப் பொருளா ளர் ப.சரவணன், தையல் சங்க மாவட்டத் தலைவர் ஹோச்சுமின் உட்பட நூற் றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.