நாகர்கோவில், பிப்.11- நாகர்கோவில் நாகராஜா கோயிலில் சுமார் 1 கோடி ரூபாய்க்கு திருப்பணிகளை ஞாயிற்றுக்கிழமையன்று அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். நாகர்கோவிலில் பிர சித்தி பெற்ற நாகராஜா கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வரு கிறார்கள். குறிப்பாக ஞாயிற் றுக்கிழமைகளில் அதிக மான பக்தர்கள் வருவார்கள். இந்த கோயிலில் கடைசியாக 2006 ஆம் ஆண்டு குட முழுக்கு நடந்தது. எனவே நாகராஜா கோவிலில் திருப் பணிகள் செய்து குட முழுக்கு நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று நாகர்கோவில் நாகராஜா கோவிலில் திருப்பணிகள் செய்ய முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருப்பணிகள் தொடர்பாக அறநிலையத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் திருப்பணிகளுக் காக சுமார் ரூ.1.08 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி திருப்பணிகள் தை மாத கடைசி ஞாயிற்றுக் கிழமையான பிப்ரவரி 11 ஆம் தேதி தொடங்கியது. குமரி மாவட்ட அறங்கா வலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். அறநிலையத் துறை இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் முன்னிலை வகித்தார். திருப் பணிகளை தமிழ்நாடு பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத் தார்.