districts

img

அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பட்டா வழங்குக!

தஞ்சாவூர், அக்.13-  அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி,  பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி,  அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டம்  சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சார்பில் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு வெள்ளிக்கிழமை பெருந் திரள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச் சாமி தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன், விவசாயத் தொழிலா ளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். வாசு, விவசாயிகள் சங்க மாவட்டக் குழு  உறுப்பினர் வீ.கருப்பையா ஆகியோர் விளக்க உரையாற்றினர். மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட  துணைத் தலைவர் ஏ.மேனகா, எஸ்.ஜே.ராஜேஷ் கண்ணா, கட்டுமான சங்கம் வி.சிவனேசன் மற்றும் பெண் கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை தாலுகா, சேதுபா வாசத்திரம் ஒன்றியம், அழகிய நாயகி புரம் ஊராட்சி கரிசவயல், பூவானம் ஊராட்சி, இரண்டாம் புலிக்காடு ஊராட்சி மேலத்தெரு, ஆற்றங்கரை, பள்ளத்தூர் ஊராட்சி சாலையோரம், ஆண்டிக்காடு ஊராட்சி செம்பருத்தி நகர், நெட்டோடை உள்ளிட்ட பகுதி களில், பல ஆண்டுகளாக சாலை ஓரங்க ளிலும், நீர்நிலை, நத்தம், தனியார் தோப்புகளில் குடியிருந்து வரும் அடித்தட்டு மக்களுக்கு, குடிமனைப் பட்டா வழங்க வேண்டும்.  அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பட்டா  வழங்க வேண்டும். அழகிய நாயகிபுரம்  அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத் தில் அனைத்து அரசு பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் 24  மணி நேரமும் மருத்துவர் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து மருத்துவப் பிரிவுகளுக்கும் மருத்துவர்கள் வருவதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து பட்டுக்கோட்டை வட்டாட் சியர் ராமச்சந்திரனை சந்தித்து மனு  அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட  வட்டாட்சியர், “தகுதியுள்ள ஏழை மக்க ளுக்கு, அரசு வழிகாட்டுதலின்படி பட்டா  வழங்கப்படும்” என உறுதியளித்தார்.