districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் வெற்றி

புதுக்கோட்டை, ஆக.14 - ஆலங்குடி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து சுமார் 2  ஏக்கர் அளவிற்கு ஆக்கிரமிக்கப் பட்டிருந்த ஆற்றுப் புறம்போக்கு நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி  தாலுகா குப்பகுடி ஊராட்சிக்கு உட்பட்டது மங்களாபுரம் கிராமம். இக் கிராமத்தில் உள்ள அம்புலி ஆற்றுப் புறம்போக்கு நிலத்தை மங்களாபுரம் மற்றும் புதுக்கோட்டை விடுதி கிராம மக்கள் தங்கள் கால்நடைகளை மேய்ப்பதற்குப் பயன்படுத்தி வந்தனர்.  இந்நிலையில், மேற்படி ஆற்றுப் புறம்போக்கில் சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்து கடந்த  சில ஆண்டுகளாக விவசாயம் செய்து  வந்துள்ளார். இந்த நிலத்தை மீட்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தொ டர்ச்சியாக அதிகாரிகளிடம் வலி யுறுத்தினர். மங்களாபுரம் மக்களுக்கான சுடு காடு, இந்த அம்புலி ஆற்றை ஒட்டி  உள்ளது. இந்நிலையில், இந்த சுடு காட்டுக்கு செல்லும் வழியையும் அடைத்து ஊர் மக்களின் எதிர்ப்பை யும் மீறி மேற்படி நபர் கடந்த சில மாதங் களுக்கு முன்பாக ஆக்கிரமித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த கிராம  மக்கள் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரி களிடம் பலமுறை வலியுறுத்தினர். கடந்த 5 மாதங்களாக ஆக்கிரமிப்பு  அகற்றப்படாத நிலையில், மேற்படி  மங்களாபுரம் மற்றும் புதுக்கோட்டை விடுதி கிராம மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் தலைமையில் போராட் டம் நடத்துவதற்கு முன்வந்தனர். இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்றும் வரை ஆலங்குடி வட்டாட்சி யர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், செவ்வாய்க் கிழமை ஆலங்குடி வட்டாட்சியர் அலு வலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கட்சி யின் திருவரங்குளம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல் தலைமை வகித்தார். குப்பகுடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.வி.செல்வம், ஊர்க்கமிட்டி தலைவர் சங்கர், பொரு ளாளர் தரணிக்குமார், புதுக்கோட்டை விடுதி ஊர்க்கமிட்டித் தலைவர் முத்துவீர்,  சிபிஎம் கிளைச் செயலா ளர்கள் ஆர்.விஜய்முருகன், ஆர்.சுதா கர், ஏ.ராமன், எம்.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர்,  மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.சுசிலா, எஸ்.பாண்டிச்செல்வி, ஆ. குமாரவேல், ஆலங்கடி நகரச் செய லாளர் ஏ.ஆர்.பாலசுப்பிரமணியன் மற்றும் கட்சியினர், கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தைத் தொடர்ந்து ஆலங்குடி வட்டாட்சியர் பெரியநா யகி  பேச்சுவார்த்தைக்கு அழைத் தார். பேச்சுவார்த்தையைத் தொ டர்ந்து மேற்படி ஆக்கிரமிக்கப்பட்ட இடத்திற்கு வருவாய்த்துறையினர் சென்றனர். அங்கு நில அளவை யர்களைக் கொண்டு ஆக்கிரமிக்கப் பட்ட இரண்டு ஏக்கருக்கும் மேற்பட்ட இடத்தை அளந்து கல் ஊன்றினர். ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் அரசின் சார்பில் மரக்கன்றுகளை நட்டுப் பரா மரிப்பது என்றும், மங்களாபுரம் கிராம  மக்களுக்கான சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை ஒழுங்குபடுத்திக் கொடுப்பது எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என அப்பகுதி மக்கள்  கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரி வித்தனர்.