மயிலாடுதுறை, ஆக.28 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் சார்பில் செப்டம்பர் 2 அன்று சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக சமூக சீர்திருத்தவாதி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவுச் சுடர் புறப்படும் நிகழ்ச்சி ஞாயிறன்று மாலை நடை பெற்றது. மயிலாடுதுறை நகராட்சி பூங்காவி லுள்ள இராமாமிர்தம் அம்மையார் சிலைக்கு மாலை அணிவித்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டப் பொருளாளர் இரா.தேன்மொழி தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் நா.சாந்த குமாரி வரவேற்று பேசினார். நினைவுச் சுடரை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மயிலாடு துறை மாவட்டத் தலைவர் டி.கணேசன் எடுத்துக் கொடுக்க, தமுஎகச மாநில துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா பெற்றுக் கொண்டார். மாவட்டச் செயலாளர் பாலசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.