districts

img

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

புதுக்கோட்டை, செப்.5-  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதிகளில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையருமான எ.சுந்தரவல்லி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.  மாவட்ட ஆட்சியர் மு.அருணா முன்னிலையில் நடைபெற்ற ஆய்வுக்குப் பின்னர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கூறுகையில், ‘‘விராலிமலை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொழிற்கல்வி குறித்தும் மற்றும் பயிற்சி நிலை யத்தின் செயல்பாடுகள் குறித்தும், விராலிமலை வட்டாட்சி யர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் மேற்கொள்ளப் பட்டுவரும் பணிகள் மற்றும்  பராமரிக்கப்பட்டுவரும் பதிவேடுகள் குறித்தும், விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் மற்றும் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விராலிமலை அரசு மருத்துவமனையில் மேற் கொள்ளப்பட்டுவரும் பணிகள், அடிப்படை வசதிகள், மருந்து இருப்புகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகை பதிவேடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும், விராலிமலை பிற்படுத்தப்பட்டோர் நல அரசினர் மாணவர் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம், மாணவர்களின் படுக்கையறைகள், விடுதியின் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது’’ என்றார். ஆய்வுகளின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர்.ரம்யாதேவி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர்பாஷா, புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ராம்கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.