பொன்னமராவதி, மார்ச் 9 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் கருப்புக்குடிபட்டியில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் அருகில் உள்ள கீரணிபுரம், காடம்பட்டி, களத்து வீடு, ஊத்துக்குளி, பிள்ளையார் களம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஒன்றாம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்று வர புதிய கார் (ஓட்டு நர் வசதியுடன்) ஒன்றை ஊர் பொதுமக்கள் வழங்கினர். இப்பகுதியில் உள்ள பொது மக்கள், முன்னாள் மாணவர்கள் தொடர்ந்து ஆரம்ப பள்ளிக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து வருகின்றனர். விழாவில் தலைமையாசிரியர் புவியரசு, ராசு உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.