districts

img

ஜெயங்கொண்டம்: அதிக மின்னழுத்தத்தால் வீடுகளில் மின் சாதனப் பொருட்கள் பழுது

அரியலூர், டிச.13- ஜெயங்கொண்டம் அருகே அதிக மின்னழுத்தம் காரணமாக பழுத டைந்த வீட்டு உபயோக மின் சாதனப் பொருட்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே குஞ்சிதபாதபுரம் கிராமத்திற்கு அதிக அளவில் மின்ன ழுத்தம் உள்ள மின் பாதையில் இருந்து பிரித்து மின்சாரம் வழங்கப்பட் டுள்ளதாக கூறப்படுகிறது.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிக மின்னழுத் தத்தால் வீட்டு உபயோக பொருட் களான ஃப்ரிட்ஜ், டிவி உள்ளிட்ட மின் சாதனங்கள் பழுதடைந்தன. இது குறித்து மின்வாரிய அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் அதிகாரிகள் சீரமைத்துக்கொடுத்தனர். அடுத்த சில வாரங்களில் இதே போன்று உயர் மின்னழுத்தம் ஏற்பட்டு வீட்டு உபயோக மின் சாதன பொருட்கள் சேதமடைந்தன. இது தொடர்கதை யாக உள்ளது.  இந்நிலையில் செவ்வாயன்று ஏற்பட்ட உயர் மின்னழுத்தத்தால் வீட்டி லிருந்த மிக்ஸி, கிரைண்டர், டிவி, வாஷிங் மெஷின், போர் மோட்டார் உள்ளிட்ட மின்சாதனங்கள் பழுத டைந்தன. இதனால் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுபோல் பலமுறை நடந்தும் மின்வாரிய அலுவலகம் உரிய நிரந்தர தீர்வு காணவில்லை 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் தலா ஐம்பதா யிரம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக மின் சாதனப் பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.

எனவே சேத மடைந்த மின்சாதன பொருட்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் வருங்காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காத வகையில் மின் பாதையை சீரமைக்க வேண்டும் அப்பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால் அடிக்கடி காற்று மழை காரணமாக விபத்துகள் ஏற்படுகிறது .எனவே மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் பாதையை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த அழகப்பன் என்பவர் கூறுகையில், இந்தப் பகுதியில் இதுபோன்று அடிக்கடி நிகழ்கிறது. நிரந்தர தீர்வு இல்லாததால் கடந்த ஒரு வருட காலமாக இதே நிலை நீடித்து வருகிறது.  மின்னழுத்தத்தால் மின்சாதனப் பொருட்கள் அனைத்தும் புகைந்து நாசமாகின என்று தெரிவித்தார். அறிவழகி என்பவர் கூறுகையில், எனது வீட்டில் மட்டும் ரூ.50 ஆயிரம் மதிப்பில் மின்சாதனப் பொருட்கள் பழுதாகின. சுற்றியுள்ள 20 வீடுகளிலும் மின்சாதனப் பொருட்கள் பழுதாகியுள்ளது. மின்சார வாரியத்தினர் நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கை எடுக்காததால் அடிக்கடி இது போன்று பழுது ஏற்படுகிறது  எனவே இதனை உரிய அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறினார்.