புதுக்கோட்டை, ஜூன் 14-
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடை யார்கோவில் வட்டம், திருப்புனவாசல் வரு வாய் கிராமத்தில், மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலை மையில் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, பொதுசுகாதாரத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டி ருந்தது.
முகாமில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வருவாய்த்துறை, ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தோட்டக்கலைத்துறை, தொழிலாளர் நலத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை, சுகாதாரத்துறை, மாற்றுத்திறனாளி கள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை களின் சார்பில், 648 பயனாளிகளுக்கு ரூ. 1,05,21,798 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன், மாவட்ட வருவாய் அலு வலர் மா.செல்வி, வருவாய் கோட்டாட்சியர் சு.சொர்ணராஜ், ஆவுடையார்கோவில் ஒன்றி யக்குழுத் தலைவர் உமாதேவி, ஊராட்சி மன்றத் தலைவர் மலர் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.