தஞ்சாவூர், மே 31- அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் முன்முயற்சியால், சலவைத் தொழிலாளிக்கு நலத்திட்ட உதவிகள் பெற்றுத் தரப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் ஊராட்சி ஒன்றியம், அழகிய நாயகிபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (50). இவரது மனைவி சித்ரா (41). சித்ரா பார்வைக் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி. மாரியப்பன் வாடிக்கையாளர்கள் தரும் துணிகளை தள்ளு வண்டியில் வைத்து துணிகளை தேய்த்துக் கொடுத்து தனது வாழ்வாதாரத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் அவரு டைய தள்ளுவண்டி பயன்படுத்த முடி யாத நிலையில், பழுதடைந்து இருப்ப தால், தனக்கு தள்ளுவண்டி மற்றும் சலவைப்பெட்டி பெற்றுத் தருமாறு, தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் ஏ.மேனகாவிடம் தெரிவித்தார். இதையடுத்து மேனகா, சமூக ஆர்வ லரும் என்கான்ஸ் சுற்றுச்சூழல் பாது காப்பு சங்கத் தலைவரும், சுகாதாரப் பணிகள் துறை ஓய்வு அலுவலருமான வ.விவேகானந்தத்திடம் தெரிவித்தார். இந்நிலையில், பட்டுக்கோட்டை மருத்துவர் சாட்சி அ.சுரேந்தர் ரூ.7,000 மதிப்புள்ள நடமாடும் தள்ளு வண்டியை யும், பட்டுக்கோட்டை ஆலயம் அறக் கட்டளை தலைவர் ஏ.கே.குமார் ரூ.7,000 மதிப்புள்ள சலவைப் பெட்டியையும் இந்த தம்பதிக்கு நன்கொடையாக வழங்க முன்வந்தனர். அதன்படி, வெள்ளிக்கிழமை பட்டுக்கோட்டை வி. என்.எஸ் சத்திரம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடமாடும் சலவை வண்டி மற்றும் சலவைப் பெட்டி சமூக ஆர்வ லர்களால் வழங்கப்பட்டது. நிகழ்வில் என்கான்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத் தலைவர் வ.விவே கானந்தம், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஏ.மேனகா, சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் எஸ்.ஜெ.ராஜேஷ் கண்ணா, சமூக ஆர்வலர்கள் ஞானசேகரன், சிரமேல் குடி குப்பு.குமரேசன், சலவை தொழிலா ளர் பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நலத்திட்ட உதவிகள் பெற்றுத் தர காரணமாக இருந்த மாற்றுத்திறனா ளிகள் சங்கத்திற்கும், சமூக ஆர்வலர் விவேகானந்தத்திற்கும் பயனாளி மாரி யப்பன் நன்றி தெரிவித்தார்.