திருவாரூர்,ஆக. 29 தமிழ்நாடு முதலமைச்சரால் சென்னை தலைமைச்செயலகத்தில் கடந்த 20ஆம் தேதியன்று கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நடத்தப்பெற்ற நிகழ்ச்சியில் திருவா ரூர் மாவட்ட கால்நடை வளர்போர் பயன்பெறும் விதமாக 5 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளை வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, திரு வாரூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 5 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ, திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலை வாணன் ஆகியோர் பார்வை யிட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை மற்றும் இப்பணிகளை மேற்கொள்வதற்காக 5 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நன்னிலம் மற்றும் திருவாரூர் ஒன்றி யப் பகுதிகளில் சேவையாற்ற நன்னி லத்தை கால்நடை மருத்துவ மனையை தலைமையிடமாக கொண்டு சிகிச்சை ஊர்தி செயல்பட உள்ளது.குடவாசல் மற்றும் கொரடாச்சேரி ஒன்றியப்பகுதிகளில் உள்ள கால்நடை வளர்ப்போர் பயன் பெறும் விதமாக கொரடாச்சேரி கால்நடை மருத்துவமனையை தலைமையிடமாக கொண்டு வாகனம் செயல்படுகிறது. நீடாமங்கலம் மற்றும் வலங்கை மான் ஒன்றியங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊர்தி எடமேலையூர் கால்நடை மருத்துவமனையை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது. மன்னார்குடி மற்றும் கோட்டூர் ஒன்றியங்களுக்கு வாகனம் மன்னார்குடி கால்நடை மருத்துவமனையை தலைமை யிடமாக கொண்டு செயல்படுகிறது. திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை ஒன்றியங்க ளுக்கான சிகிச்சை வாகனம் திருத் துறைப்பூண்டி கால்நடை மருத்துவ மனையை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது. இந்த கால்நடை மருத்துவ வாக னங்களில் ஒரு கால்நடை மருத்து வர், ஒரு கால்நடை உதவியா ளர், ஒரு ஓட்டுநர் பணியமர்த்தப் பட்டுள்ளனர். இந்த மருத்துவ வாக னங்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமங்க ளில் கால்நடை மருத்துவ சிகிச்சைப் பணிகள் மற்றும் கருவூட்டல் பணிகளை மேற்கொள்ளவும், பிற்பகலில் கால்சென்டர் மூலம் பெறப்படும் அவசர சிகிச்சை பணிகளை மேற்கொள்ளவும் உள்ளனர். அவசர சிகிச்சை தேவைப்படுவோர் 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தகவல் தர வேண்டும். இந்த கால்நடை மருத்துவ வாக னங்கள், கால்நடை சிகிச்சை முகாம் கள்,கால்நடை தடுப்பூசி முகாம்கள், கால்நடை பராமரிப்பு மற்றும் மேலாண்மை தொடர்பான விழிப்பு ணர்வு முகாம்களிலும் செயல் படுத்தப்படும். ஒரு இலட்சம் கால்நடை எண்ணிக்கை அலகுகள் கொண்ட பகுதிக்கு ஒரு ஆம்புலன்ஸ் என்ற இலக்கினை கொண்டு, கால்நடை மருத்துவ சிகிச்சை வாக னங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் கால்நடை சிகிச்சை க்கு தேவைப்படும் அத்தியாவசிய மருந்துகள் உயிர் காக்கும் மருந்து கள், சிறிய ஆய்வுக்கூடம், தடுப்பூசி களுக்கான குளிர்சாதனப்பெட்டி போன்ற வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, திருவாரூர் மாவட்டத் திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 5 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள். தங்களது கிராமத்திற்கு கால்நடை மருத்துவ சேவையாற்ற, நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை வாகனங்கள் வரும் போது, கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது. நிகழ்வில், கால்நடை பராம ரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குநர் மரு.ஹமீது அலி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கால் நடைமருத்துவர்கள், உதவியா ளர்கள் உடனிருந்தனர்.