districts

img

நூறு நாள் வேலை தொழிலாளிகளை வஞ்சிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து ஒப்பாரிப் போராட்டம்

தஞ்சாவூர், நவ.6 - நூறுநாள் வேலைத் திட்ட தொழிலா ளர்களுக்கு, சம்பளப் பாக்கி நிலுவையை உடனே வழங்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்தியும், கூலியை ரூ.600 ஆக அதிகரித்தும் வழங்க வேண்டும் எனக் கோரியும், ஒன்றிய அரசு நூறு நாள் வேலை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்து, திட்டத்தை சீர்குலைத்து வரு வதைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, அகில இந்திய விவசாயத்  தொழிலாளர் சங்கம் சார்பில் திங்கட் கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவல கங்கள் முன்பு ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் கோ.நீலமேகம், எம்.செல்வம்  கண்டன உரையாற்றினர். விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் மகாலிங்கம், ஒன்றியச் செயலாளர் தமிழ்செல்வன், கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் கிளைச் செயலாளர்கள், நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

கும்பகோணம் 

அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கம் சார்பில் கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடை பெற்ற நூதன போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் நாகமுத்து தலைமை வகித்தார். ஒன்றியச்  செயலாளர் செந்தில், துணை செயலா ளர் தட்சிணாமூர்த்தி, குணசேகரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். போராட் டத்தை விளக்கி விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு, மாநிலக் குழு உறுப்பினர் சி.நாகராஜன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருளரசன், ஒன்றியச் செயலாளர் கணேசன் ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினார். திருப்பனந்தாள் ஒன்றிய அலுவ லகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி சார்பில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத் திற்கு சிபிஎம் திருப்பனந்தாள் ஒன்றியச்  செயலாளர் ஏ.எஸ்.பாரதி தலைமை வகித் தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தஞ்சை  மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டி யன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். பின்னர், திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். 

திருச்சிராப்பள்ளி

அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்க முசிறி ஒன்றியக்குழு சார்பில் புலிவலம் கடைவீதியில் இந்தி யன் ஓவர்சீஸ் வங்கி முன்பு ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடந்தது. போராட்டத் திற்கு சங்க துணைத் தலைவர் வீராசாமி  தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில பொருளாளர் அ.பழநி சாமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் நல்லு சாமி, மாதர் சங்க மாவட்டத் தலைவர்  ப.லிங்கராணி, விவசாய தொழிலாளர் கள் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ்.அசோக், வாலிபர் சங்க ஒன்றிய துணைத் தலைவர் அப்துல் ரகுமான் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.    

மயிலாடுதுறை

மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மயிலாடு துறை ஒன்றியத்தில் 4 இடங்களில் சாலை  மறியல் போராட்டம் நடைபெற்றது. கழுக் காணிமுட்டம் அண்ணாசிலை அருகில் நடைபெற்ற போராட்டத்திற்கு  மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார். இளந்தோப்பில் ஒன்றியச் செயலாளர் டி.ஜி.ரவிச்சந்திரன் தலை மையிலும், மாப்படுகை அண்ணாசிலை  அருகில் மாவட்டக் குழு உறுப்பினர் சி.மேக நாதன் தலைமையிலும், கடலங்குடி கிரா மத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.அறி வழகன் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது. 

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டம் தலை ஞாயிறு ஒன்றியம் வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் உள்ள அஞ்சலகம் முன்பு  நடைபெற்ற போராட்டத்தில் சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரி முத்து பேசினார். புதுச்சேரி, அகரஒரத்தூர், தேமங்கலம்,  வலிவலம், தேவூர், கீழ்வேளூர், ராதா மங்கலம், திருக்கண்ணங்குடி, கோவூர்,  பட்டமங்கலம், வேதாரண்யம், தாணிக் கோட்டகம், பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி,  பஞ்சநதிகுளம் கிழக்கு, ஆயக்காரன் புலம், கரியாபட்டினம், வாட்டாக்குடி, காடந் தேத்தி, மணக்குடி, வடுகூர், சித்தாய மூர், திருமருகல், கணபதிபுரம் ஆகிய இடங் களிலும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முரு கையன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 

திருவாரூர்
திருவாரூர் ஒன்றியத்தில் புதுப்புத் தூர், மாவூர், தப்புளாம்புளியூர் ஆகிய மூன்று மையங்களில் போராட்டம் நடை பெற்றது. இதில் விவசாயத் தொழிலா ளர் சங்க ஒன்றியத் தலைவர் டி.கலிய பெருமாள், ஒன்றியச் செயலாளர் வி.ரா ஜாங்கம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.இடும்பையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கோமதி, மூத்த தோழர்  பி.மாதவன், விவசாயிகள் சங்க ஒன்றி யத் தலைவர் ஆர்.எஸ்.சுந்தரய்யா மற்றும் கேப்டன் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வலங்கைமானில் நடந்த போராட் டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்க  ஒன்றியச் செயலாளர் என்.பாலையா, துணைத் தலைவர் பூசையன், சின்னை யன் மற்றும் சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் என்.ராதா மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தலைமை வகித்தனர். கொரடாச்சேரியில் குளிக்கரை, முகந் தனூர், திருக்கண்ணமங்கை, அரச வனங்காடு ஆகிய நடந்த போராட்டத் தில், விவசாயத் தொழிலாளர் சங்க  ஒன்றியச் செயலாளர் கே.கோபிராஜ், ஒன்றியத் தலைவர் ஆர்.மணியன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் டி.ஜெய பால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முத்துப்பேட்டையில் விவசாய தொழிலா ளர் சங்க ஒன்றியச் செயலாளர் வி.எஸ். காளிமுத்து, சிபிஎம் செயற்குழு உறுப்பி னர் சி.ஜோதிபாஸ், நகரச் செயலாளர் சி. செல்லத்துரை ஆகியோர் பங்கேற்றனர்.

நீடாமங்கலம் 
நீடாமங்கலம் ஒன்றியத்தில் 4 இடங் களில் ஒப்பாரி வைத்து போராட்டம் நடை பெற்றது. ஒளிமதியில் வி.தொ.ச ஒன்றி யக் குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி தலை மையிலும், தென்கரவயலில் ஒன்றியத்  தலைவர் டி.முருகேசன் தலைமையி லும், ஒரத்தூரில் சுலோசனா தலைமையி லும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் ஜான்கென்னடி, விதொச ஒன்றியச்  செயலாளர் காளியப்பன், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் பாண்டியன், மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் சுமதி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கரூர் விவசாயத் தொழிலாளர்கள் சங்கம்  சார்பில் கரூர் மாவட்டத்தில் பறை இசைத்து, ஒப்பாரி வைக்கும் போராட்டம்  நடைபெற்றது. கடவூர் ஒன்றியம், தரகம்பட்டியில் கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி தலைமை வகித்தார்.  சிபிஎம்  மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, விதொச மாவட்டச் செயலாளர் பி.ராஜூ ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிபிம்  கடவூர் ஒன்றியச் செயலாளர் பி.பழனி வேல், விதொச ஒன்றியச் செயலாளர் பி. வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  கிருஷ்ணராயபுரம் அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் கிருஷ்ணராயபுரம் ஒன்றி யக்குழு சார்பில் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் எ.தர்மராஜன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், விதொச மாவட்ட துணைத் தலைவர் இரா.முத்துச் செல்வன், மாவட்ட தலைவர் ஒ.கே.கண்ணதாசன், சிபிஎம் ஒன்றியச் செய லாளர் ஜி.தர்மலிங்கம், விச மாவட்டப் பொருளாளர் கே.சுப்பிரமணி ஆகியோர்  சிறப்புரையாற்றினர்.